படவேடு (Padavedu) என்பது தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்

படவேடு
PADAVEDU
படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் தோற்றம்
படவேடு is located in தமிழ்நாடு
படவேடு
படவேடு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
படவேடு is located in இந்தியா
படவேடு
படவேடு
படவேடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°39′35″N 79°06′56″E / 12.6596980°N 79.1154969°E / 12.6596980; 79.1154969
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்ஆரணி
சட்டமன்றத் தொகுதிகலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்படவேடு ஊராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு. சி.அண்ணாதுரை
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.
 • மாவட்ட ஆட்சியர்திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப.
பரப்பளவு
 • மொத்தம்8 km2 (3 sq mi)
 • பரப்பளவு தரவரிசை211 மீட்டர்கள்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,776
 • அடர்த்தி1,500/km2 (3,800/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
606905
வாகனப் பதிவுTN 97
ஊராட்சி ஒன்றியம்போளூர்
சென்னையிலிருந்து தொலைவு159 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு57 கி.மீ
வேலூரிலிருந்து தொலைவு35 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு20 கி.மீ.
போளூரிலிருந்து தொலைவு27 கி.மீ.
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு81 கி.மீ.
ஆற்காட்டிலிருந்து தொலைவு47 கி.மீ.
இணையதளம்படவேடு பேரூராட்சி

இந்த நகரத்தில் படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயில் அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் 7 வெள்ளிக்கிழமைகளில் மிகவும் பெரிய அளவில் திருவிழா நடைபெறும். இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது.

அமைவிடம்

தொகு

படவேடு அமைந்துள்ள 12°39′35″N 79°06′56″E / 12.6596980°N 79.1154969°E / 12.6596980; 79.1154969 இடமாகும். இது ஆரணி வட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. சித்தூர் - திருவண்ணாமலை - கடலூர் நெடுஞ்சாலையில் சந்தவாசலுக்கு மேற்கே 6.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 57 கி.மீ. தொலைவிலும், வேலூரிலிருந்து 37கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

தொகு

படை+வீடு=படைவீடு. படைகள் தங்கிருந்த இடம். இராச கம்பீர சம்புவராயரர் எனும் அரசன் தனது படைகளுடன் தங்கிய போரிட்டதால் படைவீடு எனவும் பெயர் பெற்று நாளடைவில் படவேடு என மருவி வந்துள்ளது. அம்மன் கோயில் அமைந்துள்ள இடம் அம்மன் கோயில் படவேடு (அ.கோ.படவேடு A.K.படவேடு) என தற்போது பெயர் பெற்றுள்ளது. படைவீடு எனும் ஊர் அ.கோ.படவேட்டிலிருந்து மேற்கில் 2கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2]

மக்கள் தொகை

தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 11776 ஆகும். இவர்களில் பெண்கள் 5918 பேரும் ஆண்கள் 5858 பேரும் உள்ளனர்.

வரலாறு

தொகு

ஆரணி, தேவிகாபுரம், வந்தவாசி போன்ற பகுதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முக்கிய கேந்திரமாக விளங்கி வந்துள்ளது. சோழர்களின் கீழ் குறுநில மன்னராக விளங்கிய சம்புவராயர்கள் பின்பு படைவீட்டை தலைமையிடமாகக் கொண்டு தனிஅரசாட்சி அமைத்து ஆண்டுவந்துள்ளார். ஆரணியின் உள்ள கோட்டை கைலாசநாதர் கோயிலும் கோட்டை பகுதிகளும் அதற்கு சாட்சியாக விளங்குகின்றன [1]

சாலை வசதிகள்

தொகு

படவேடு நகரை பொறுத்த வரை சாலைகள் மாவட்ட சாலைகள் மூலமாகவும், கிராம சாலைகள் மூலமாகவும் இணைக்கப்படுகிறது.

1.மாவட்ட சாலை 751 - படவேடு - சந்தவாசல் - ஆரணி நெடுஞ்சாலை

2.மாவட்ட சாலை - படவேடு - காளசமுத்திரம் - கண்ணமங்கலம் நெடுஞ்சாலை

3.மாவட்ட சாலை - படவேடு - சந்தவாசல் - களம்பூர் நெடுஞ்சாலை

போக்குவரத்து வசதிகள்

தொகு

பேருந்து வசதிகளைப் பொறுத்த வரை ஆரணி பணிமனையின் மூலம் அதிக பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.

செண்பகத் தோப்பு அணை

தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி அருகே அமைந்துள்ளது இந்த அணை. ஜவ்வாது மலையிலிருந்து உருவாகும் கமண்டல நாகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். இந்த அணையின் மொத்த கொள்ளளவு: 54 அடி பில்லியன் கன அடி (2.64 km). இந்த அணையை 1996 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

சான்றுகள்

தொகு
  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
  2. https://brseetha.blogspot.com/2017/08/ak.html?m=1%7C படவேடு பெயர்க்காரணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=படவேடு&oldid=4248001" இலிருந்து மீள்விக்கப்பட்டது