பணம் (திரைப்படம்)
- இது திரைப்படத்தைப் பற்றியது. பணத்தைப் பற்றி அறிய பணம் பக்கத்தைப் பார்க்கவும்
பணம் (Panam) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி திரைக்கதையை எழுதினார். இதில் சிவாஜி கணேசன், பத்மினி, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர்.[2][3][4]
பணம் | |
---|---|
இயக்கம் | என். எஸ். கிருஷ்ணன் |
தயாரிப்பு | ஏ. எல். ஸ்ரீநிவாசன் மெட்ராஸ் பிக்சர்ஸ் |
கதை | மூலக்கதை : என்.வி.பாபு திரைக்கதை - வசனம் : மு. கருணாநிதி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் என். எஸ். கிருஷ்ணன் வி. கே. ராமசாமி எஸ். எஸ். ராஜேந்திரன் கே. ஏ. தங்கவேலு பி. ஆர். பந்துலு பத்மினி டி. ஏ. மதுரம் வி. சுசீலா எஸ். டி. சுப்புலட்சுமி கொட்டாப்புளி ஜெயராமன் சந்திரா தனம் எம். ஆர். சாமிநாதன் டி. கே. ராமச்சந்திரன் சி.எஸ்.பாண்டியன் சி. வி. வி. பந்துலு கே. சந்திரசேகரன் வி.பி.எஸ்.மணி கரிக்கோல்ராஜ் முத்துப்பிள்ளை தாமோதரன் ரங்கநாதன் [1] |
ஒளிப்பதிவு | மோகன் ராவ் |
படத்தொகுப்பு | தேவராசன் |
வெளியீடு | திசம்பர் 27, 1952 |
ஓட்டம் | . |
நீளம் | 17480 அடி |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
பாடல்கள்தொகு
- எங்கே தேடுவேன்...பணத்தை எங்கே தேடுவேன்
- குடும்பத்தின் விளக்கு... - பாடியவர்: எம். எல். வசந்தகுமாரி
- 'தினா முனா கனா
வெளியீடுதொகு
இது சிவாஜிகணேசனின் இரண்டாவது திரைப்படம். 'பராசக்தி' வெளியாகி 2 மாதங்களுக்குப் பின் இத்திரைப்படம் வெளியாகியது. பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தயாராகி வந்தன. பராசக்தி வெளிவருவதில் கொஞ்சம் தாமதமாகியிருந்தால், சிவாஜியின் முதல் திரைப்படமாக பணம் அமைந்திருக்கும்.