பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை)

திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி (இலத்தீன்: Gregorius XV; 9/15 ஜனவரி 1554 – 8 ஜூலை 1623), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 9 பெப்ரவரி 1621 முதல் 1623இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.

திருத்தந்தை
பதினைந்தாம் கிரகோரி
ஆட்சி துவக்கம்9 பெப்ரவரி 1621
ஆட்சி முடிவு8 ஜூலை 1623
முன்னிருந்தவர்ஐந்தாம் பவுல்
பின்வந்தவர்எட்டாம் அர்பன்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு1 மே 1612
Cardinal Scipione Caffarelli-Borghese-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது19 செப்டம்பர் 1616
பிற தகவல்கள்
இயற்பெயர்Alessandro Ludovisi
பிறப்பு9 அல்லது 15 ஜனவரி 1554
Bologna, திருத்தந்தை நாடுகள்
இறப்பு8 சூலை 1623(1623-07-08) (அகவை 69)
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
கிரகோரி என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

கர்தினால் அலெக்சாண்ரோ, மடல்கள் எழுதுவதில் பேருவகை கொள்வார். 1621 பிப்ரவரியில் புதிய பாப்புவாக தேர்தெடுக்கப் படும்போதே நோயுற்றவராயிருந்தார். இதனால், பாப்புக்குரிய பணியாற்றும் நிலையில் அவர் இல்லை. எனினும் புதிய பாப்புவாக தேர்தெடுப்பது பற்றிய சில ஆனைகளைப் பிறப்பித்தார். திருச்சபை அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பரவி வந்தது. இந்த நாடுகளில் திருமறைப் பரப்புபணியாற்றுவதற்காக புதிய அமைப்புகளை நிறுவினார்.

திருச்சபையின் பெரும் புனிதர்களுல் சிலரான அவிலாவின் புனித தெரேசா, பிரான்சிஸ் சவேரியார், லொயோலா இஞ்ஞாசி, பிலிப்பு நேரி ஆகியோருக்கு புனிதர் பட்டமும் அலோசியுஸ் கொன்சாகாவுக்கு அருளாளர் பட்டமும் அளித்தவர் இவர். 1623 ஜீலை 8 ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
Scipione Borghese
Archbishop of Bologna
12 மார்ச் 1612 – 9 பெப்ரவரி 1621
பின்னர்
Ludovico Ludovisi
முன்னர்
ஐந்தாம் பவுல்
திருத்தந்தை
9 பெப்ரவரி 1621 – 8 ஜூலை 1623
பின்னர்
எட்டாம் அர்பன்