வணக்கம்!

எனது பெயர் ஹரி கணேஷ். பெங்களூர் மாவட்டத்தில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனது சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தின் திருவெறும்பூர் ஆகும்.

பொழுதுபோக்கு:

cricket விளையாட்டு, படம், பாட்டு இவைகளில் நாட்டம் அதிகம்.

சமீப காலமாக புத்தகம் படிப்பதில் நாட்டம் ஏற்பட்டுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், மோகினி தீவு போன்ற புதினங்களை படித்துள்ளேன். மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கிமு கிபி, மனிதனுக்குள் மிருகம், மனிதனும் மர்மங்களும் ஆகியவற்றையும் படித்துள்ளேன்.

இவைதவிர, ஆன்மீக சொற்பொழிவுகளும் பிடிக்கும். திரு கிருபானந்த வாரியார், புலவர் கீரன், திருச்சி கல்யாணசுந்தரம் ஆகியவர்களின் சொற்பொழிவுகள் மிகவும் பிடித்தவை.

நன்றி!!!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:HariGanesh&oldid=1806676" இலிருந்து மீள்விக்கப்பட்டது