பாணாற்றுப்படை

பாணாற்றுப்படை என்பது ஆற்றுப்படை நூல் அல்லது பாடல் வகையில் ஒன்று. பாணன் என்பவன் யாழிசை வாணன். இப்பாடல்கள் பாணன் ஒருவனைப் பரிசில் பெறச் செல்ல வழிப்படுத்திப் பாடப்படுவது. வறுமையில் வாடும் பாணனை ஆற்றுப்படுத்துவதாக எட்டுப் பாடல்கள் சங்கப் பாடல் தொகுப்பில் உள்ளன. மேலும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுபடை என்னும் பத்துப்பாட்டுத் தொகுப்பிலுள்ள நூல்களும் இவற்றுடன் கொள்ளத் தக்கவை.

  1. செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் கபிலர் ஆற்றுப்படுத்துகிறார் [1]
  2. சோழன் நலங்கிள்ளியிடம் கோவூர் கிழார் ஆற்றுப்படுத்துகிறார். [2]
  3. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் ஆலத்தூர் கிழார் ஆற்றுப்படுத்துகிறார். [3]
  4. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் கோவூர் கிழார் ஆற்றுப்படுத்துகிறார். [4]
  5. நாஞ்சில் வள்ளுவனிடம் மருதன் இளநாகனார் ஆற்றுப்படுத்துகிறார். [5]
  6. வையாவிக் கோப்பெரும் பேகனிடம் பரணர் ஆற்றுப்படுத்துகிறார். [6]
  7. கொண்கானாங் கிழானிடம் மோசிகீரனார் ஆற்றுப்படுத்துகிறார். [7]
  8. ஈந்தூர் கிழான் தோயன் மாறனிடம் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் ஆற்றுப்படுத்துகிறார். [8]

அடிக்குறிப்பு தொகு

  1. கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு, பந்தர் பெயரிய பேரிசை மூதூர், கடன் அறி மரபின் கைவல் பாண, தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை ... நேரிப் பொருநன் செல்வக் கோமாற் பாடினை செலினே - பதிற்றுப்பத்து 67
  2. பாண! உறந்தையோன் பிறன் கடை மறப்ப நல்குவன். புறநானூறு 68,
  3. பாணன் கையில் ‘கடன்நிறை யாழ்’ வைத்துள்ளான். பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை சூட்டி அனுப்புவான் என்கிறார். புறநானூறு 69,
  4. விறகு வெட்டிப் பிழைப்போர் பொன் பெற்றது போல நல்குவான். புறநானூறு 70,
  5. ‘மாறி வா என மொழியலன்’ புறநானூறு 138,
  6. தனக்கு வரும் மறுமையை எண்ணாமல் புலவரின் வறுமையை எண்ணுவான். புறநானூறு 141,
  7. பாண, இலம்படு புலவர் மண்டை (உண்கலம்) நிறைய பொன் வழங்குவான். புறநானூறு 155,
  8. ‘எம்மொடு நீயும் வம்மோ முதுவாய் இரவல’ புறநானூறு 180
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணாற்றுப்படை&oldid=1166465" இலிருந்து மீள்விக்கப்பட்டது