பா. குப்புசாமி

பா. குப்புசாமி (பிறப்பு: டிசம்பர் 28, 1935) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பி. கே. சாமி என்ற புனைப்பெயரிலும் எழுதிவரும் இவர், தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்க பொது உறவு அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1958-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

வானொலித்துறை தொகு

மலேசிய வானொலியின் கல்வி ஒலிபரப்பில் இவர் பணியாற்றியுள்ளார். மேலும், பல வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.

நாடகக் கலைஞர் தொகு

இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞராகவும் பணியாற்றி வருகின்றார்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._குப்புசாமி&oldid=3582429" இலிருந்து மீள்விக்கப்பட்டது