பிரவரா ஆறு

(பிரவாரா ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரவரா ஆறு (Pravara River) என்பது இந்தியாவின் மகாராட்டிராவில் பாயும் கோதாவரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் சிறியது ஆறாகும். கோதாவரி ஆற்றின் 7 முக்கிய துணை நதிகளில், கோதாவரிக்கு இணையான மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரே துணை ஆறு இதுவாகும். மேலும், கோதாவரியின் ஒரே பெரிய துணை ஆறும் இதுவே. இதன் மூலமும் சங்கமும் ஒரே மாவட்டத்தில் (அகமது நகர்) அமைந்துள்ளது.

பிரவரா
குடை அருவி, பிரவரா ஆற்றில்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகராட்டிரம்
மாவட்டம்அகமதுநகர்
நகரம்சங்கம்னெர், நெவாசா
சிறப்புக்கூறுகள்
மூலம்சகாயத்ரி
 ⁃ அமைவுஅகமத்நகர், நாகிக் துணை மணடலம், மகராட்டிரம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்19°31′45″N 73°45′5″E / 19.52917°N 73.75139°E / 19.52917; 73.75139
 ⁃ ஏற்றம்750 m (2,460 அடி)
முகத்துவாரம்கோதாவரி ஆறு
 ⁃ அமைவு
பிராவார சங்கம், அகமத்நகர், நாகிக் துணை மணடலம், மகராட்டிரம், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
19°37′00″N 75°01′00″E / 19.61667°N 75.01667°E / 19.61667; 75.01667
 ⁃ உயர ஏற்றம்
531 m (1,742 அடி)
நீளம்208 km (129 mi)
வடிநில அளவு6,537 km2 (2,524 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுவாகி ஆறு, மகாலுங்கி ஆறு
 ⁃ வலதுமுலா ஆறு

சொற்பிறப்பியல் தொகு

இந்திய வேதங்களின்படி,[1] அகத்திய முனிவர் நீண்ட காலம் தண்ணீர் மற்றும் காற்றை மட்டுமே உட்கொண்டு தியானம் செய்தார். இவரது நம்பமுடியாத பக்தியின் காரணமாக, சிவபெருமான் தோன்றி, இவரை ஆசீர்வதித்து, கங்கை ஆற்றை விட்டு வெளியேறினார். வெளியேறிய ஆறு, பிரவரா ஆறு என்று அறியப்பட்டது.

தோற்றம் தொகு

மகாராட்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் குலாங் மற்றும் ரத்தங்காட் மலைகளுக்கு இடையே சஹாயாத்ரியின் கிழக்கு சரிவுகளில் பிரவரா உருவாகிறது.[2]

ஆற்றோட்டம் தொகு

இந்த ஆறு இதன் தோற்றத்திற்கு அருகில் உள்ள பந்தர்தாரா நகரத்தில் பாய்கிறது. இங்கு ஆர்தர் ஏரியை உருவாகியுள்ளது. பிரவரா ஆற்றின் குறுக்கே பந்தர்தாரா அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் கதவுகள் அவ்வப்போது திறக்கப்பட்டு, பிரவராவின் நீரோட்டத்தினை அனுமதிக்க, குடை நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. இங்கிருந்து ஆறு கிழக்கு நோக்கிப் பாய்ந்து 58 கி.மீ. தூரத்தில் உள்ள மற்றொரு நகரமான சங்கம்னேரை அடைகிறது. இங்கு மகாலுங்கி நதியுடன் சங்கமிக்கிறது. அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். கிழக்கு நோக்கித் தொடர்ந்து ஓடும், இந்த ஆறு மற்றொரு துணை ஆறான முலா ஆற்றுடன் இணைகிறது. பின்னர் நெவாசா நகரத்தை அடைந்து 12 கி. மீ. தூரம் ஓடி இறுதியாகக் கோதாவரி ஆற்றில் சங்கமிக்கிறது.[3] இது இந்த ஆற்றின் மூலத்திலிருந்து 208 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.

துணை ஆறு தொகு

இதன் குறுகிய ஓட்டத்தில் இரண்டு முக்கிய துணை ஆறுகளிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது: மகாலுங்கி மற்றும் முலா.

  • மகாலுங்கி: இது பட்டா மற்றும் அவுந்தாவின் தெற்கு மற்றும் கிழக்கு சரிவுகளில் உருவாகிறது. மூன்று மைல்களுக்குப் பிறகு (4.8 கிமீ), இது நாசிக்கின் சின்னார் வட்டத்தில் கிழக்கே செல்கிறது. இது அகமதுநகரில் மீண்டும் நுழைந்து, தெற்கு நோக்கி ஒரு வளைவை ஏற்படுத்தி சங்கம்னரில் முடிவடைகிறது. இங்கு இதன் இடது கரையில் பிரவராவுடன் சங்கமிக்கிறது.
  • முலா: இந்த நதி ரதங்காட் மற்றும் அரிசந்திரகாட் இடையே சஹாயாத்ரியின் கிழக்கு சரிவுகளில் எழுகிறது. முதல் இருபது மைல்களுக்கு, இது பிரவராவுக்கு இணையாகப் பாய்கிறது. அகோலா தாலுகாவின் தெற்கு அல்லது கொடுல் பள்ளத்தாக்கில் பாய்கிறது. கொடுல் நகரைக் கடந்து பாலேசுவருக்கு வளைந்து செல்கிறது. பின்னர் சங்கம்னர், பார்னர் வழியாக செல்கிறது. பாரகான் நந்தூரில் ஆற்றின் குறுக்கே முலா அணை கட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு நெவாசா நகரத்திற்குச் சற்று முன்பு பிரவராவில் வடிகிறது.
  • அதாலா: இது வடக்கு அகோலின் பட்டா மற்றும் மகாகாளியின் சரிவுகளில் உருவாகிறது. மேற்கு சங்கமனேரில் 3 கி. மீ. பயணித்து பிரவராவுடன் இணைகிறது.

அணைகள் தொகு

  • பந்தர்தாரா அணை
  • நில்வாண்டே அணை

மேற்கோள்கள் தொகு

  1. "Did You Know - Anandvan Resort - Bhandardara". Archived from the original on 2015-10-29. பார்க்கப்பட்ட நாள் 2022-02-27.
  2. "Geography of Ahmednagar District". பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
  3. Cyrille Korsakoff, Tina Kuo Shi Wen. "PRAVARA SANGAM MAHARASHTRA INDIA Geography Population Map cities coordinates location - Tageo.com". www.tageo.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவரா_ஆறு&oldid=3590006" இலிருந்து மீள்விக்கப்பட்டது