புறநாட்டுச் செய்கை

புறநாட்டுச் செய்கை என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]

வேந்தன் அரியணையில் அமர்ந்துகொண்டு ஒற்றர்களைப் புறநாட்டுக்கு அனுப்புவான். ஒற்றன் திரும்பி வந்து, தான் கண்ட புறநாட்டு மன்னனின் செயல்பாடுகளைச் சொல்வான். புறநாட்டான் பொன்னைத் திறையாகக் கொண்டுவந்து வேந்தனுக்குத் தருவான். – இது போன்ற செய்திகளைப் பாடலால் கூறும் நூல் புறநாட்டுச் செய்கை என்னும் இலக்கியம்.

வேந்தன் அத்தாணி மிசை உற்று ஒற்றர்ப் போக்கித்
தாம் திரும்பி வேந்தர் இயல் சாற்றுவது – வாய்ந்த
புறநாட்டுச் செய்கை புறநாட்டார் பொன்னைத்
திறைக் குவித்தல் அப் பெயர்ப்பாம் செப்பு. [2]

மேற்கோள் தொகு

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 487
  2. நூற்பா 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறநாட்டுச்_செய்கை&oldid=2098186" இலிருந்து மீள்விக்கப்பட்டது