பெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம், 1998

பெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம், 1998 ஜூலை 30, 1998 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பொது இடங்களில் பெண்களைக் கேலி செய்வதைத் தடுப்பதற்காக இந்தச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. மசோதா எண் 53 மூலம் தமிழகத்தில் சுதந்திர இந்தியாவின் 49ஆவது ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

சட்டம் இயற்றக் காரணம் தொகு

ஜூலை 18, 1998, இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் இருந்து ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த ஒரு கும்பல் குடிபோதையில் சாலையில் நடந்து கொண்டிருந்த சாரிகா மற்றும் அவரது நண்பர் கவிதா மீது நீர் தெளித்தது. மேலும் ஒரு படி சென்று, ஹரி என்பவர் சாரிகா மீது சமநிலையை இழந்து விழுந்து கடுமையான தலைக் காயங்கள் காரணமாக மரணமடைந்தார். சென்னை எத்திராஜ் கல்லூரியை சேர்ந்த சாரிகா ஷா என்ற ஒரு பெண் மாணவரின் மரணம் இந்த சட்டம் இயற்ற காரணமாயிற்று. [1][2]

சட்டம் தொகு

  • எல்லா இடங்களிலிலும் பெண்களை கேலி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
  • இதனை மீறுவோருக்கு 1 வருட கடுங்காவல், 1௦,௦௦௦ ரூபாய் அபராதம்

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-03-25. பார்க்கப்பட்ட நாள் 2014-09-15.
  2. http://www.thehindu.com/2001/04/27/stories/04272233.htm