பெரிய புராணம் - ஓர் ஆய்வு, தொகுதி 1 (நூல்)

பெரிய புராணம் ஓர் ஆய்வு பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இந்நூலில் சேக்கிழார் சைவ சமய அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பெரியபுராணம் எனும் நூலினை ஆய்வு செய்து எழுதியுள்ளார். இதன் இரண்டாவது தொகுதி பெரிய புராணம் ஓர் ஆய்வு தொகுதி 2 எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை சென்னை தியாகராய நகரில் இயங்கிய கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

பெரிய புராணம் ஓர் ஆய்வு நூலின் அட்டைப்படம்
நூல் பெயர்:பெரிய புராணம் ஓர் ஆய்வு நூலின் அட்டைப்படம்
ஆசிரியர்(கள்):அ. ச. ஞானசம்பந்தன்
வகை:ஆய்வு, சைவ சமயம்
காலம்:மார்ச் 1999
மொழி:தமிழ்
பக்கங்கள்:351
பதிப்பகர்:கங்கை புத்தக நிலையம்
பிற குறிப்புகள்:தொடர்ச்சி பெரிய புராணம் ஓர் ஆய்வு தொகுதி 2

தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான முது முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெரியபுராணம் பற்றிய ஆய்வை மேற்கொண்டதாக ஞானசம்பந்தன் அவர்கள் அறிமுக உரையில் கூறுகின்றார்.

உள்ளடக்கங்கள் தொகு

  1. முன்னுரை
  2. வேதகால ருத்ர சிவன்
  3. வேதத்தில் புருந்த சிவன்
  4. சங்கத்தமிழர் கண்ட சிவன்
  5. காப்பிய காலம்வரை சிவன்
  6. தேவார காலத்திற்கு முந்தைய சிவன்
  7. மூவர் காலப் பின்னணி
  8. திருஞானசம்பந்தர் கூறும் சைவம்
  9. சேக்கிழார் கண்ட சைவம்
  10. சேக்கிழார் படைப்பாற்றல்
  11. அடியா்கள் யார்
  12. தொண்டு நெறியே சைவ நெறி
  13. புரட்சியின் இரண்டாவது வழி
  14. இரு வழிகளின் போராட்டம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

நூலகம் தளத்தில் மின்நூல் தரவிரக்கம்[தொடர்பிழந்த இணைப்பு]