பேச்சு:சேந்தன் பக்கத்திலிருந்து தொகு

செல்வா, இங்குள்ள சேந்தன் குறித்த தகவல்கள் திவாகர நிகண்டு குறித்த கட்டுரையிலேயே வந்து விடுகிறது. மேற்கொண்டு சேந்தன் பற்றி தகவல்கள் சேர்க்க இயலாத நிலையில், இந்த ஒரு வரிக்கட்டுரையை அழிக்கலாமா?--Ravidreams 16:30, 27 பெப்ரவரி 2007 (UTC)

ரவி, நீக்க வேண்டும் என்று கருதினால், நீக்கலாம். நான் முன்னர் வேறு ஏதோ ஒரு கட்டுரையில் இதுபற்றி தொடர்பு கொடுத்திருந்தேன். பின்னர் சற்றேனும் விரித்து எழுத இயலும் என்றே இவ் ஒருவரிக் கட்டுரையை இட்டேன். ஒருசில இப்படி நீக்கவேண்டியன போல் இருந்தாலும், இப்போதைக்கு விட்டுவைப்பதில் தவறில்லை. தரம் கண்காணிக்க இது போன்ற கழிப்பு வேலைகள் தேவை என்றாலும், கட்டுரை நீக்கம் அவ்வளவு முக்கியம் இல்லை என்பது என் கருத்து. அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள், நீங்களும் நானும் இதற்கு எழுதியதற்கு எவ்வளவு நேரமும் பைட்டளவும் ஆகியுள்ளது என்று! தவறாக எண்ணாதீர்கள்.--செல்வா 17:09, 27 பெப்ரவரி 2007 (UTC)

குறுங்கட்டுரைகள் ஒன்றிணைப்பு தொகு

மிகச்சிறியவையாக இருந்த சேந்தன், திவாகர முனிவர் ஆகிய இரு பக்கங்களும் திவாகர நிகண்டு பக்கத்துக்கு வழிமாற்றப்பட்டுள்ளன. கோபி 15:09, 20 நவம்பர் 2007 (UTC)Reply

குறிப்புகள் தொகு

திவாகரன் என்ற புலவரால் இயற்றப்பட்டதால் திவாகர நிகண்டு என்று அழைக்கப்படுகிறது.காலம் 9ம் நூற்றாண்டு. தன்னை ஆதரித்த சேந்தன் என்ற மன்னனை 19 இடங்களில் திவாகரர் இந்நூலில் குறிப்பிடுகிறார். எனவே, இந்நூல் சேந்தன்திவாகரநிகண்டு என்றும் அழைக்கப்படுகிறது.இந்நிகண்டு தமிழில் தோன்றிய முதல் நிகண்டு என்பதால் முதல் நிகண்டு,ஆதிநிகண்டு,ஆதிதிவாகரம் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. 2180 சூத்திரங்களைக் கொண்ட இந்நிகண்டு 12 பிரிவுகளையுடையது.தற்கால அகராதிக்கு இநநூல் முன்னோடி. 9500 சொற்களுக்கு விளக்கம் தருகிறது.இவரை சமணர் என்றும் சைவர் என்றும் நூல்கள் பலபட கூறுகின்றன.இந்நூல் 12 பிரிவுகள் உடையது. இப்பிரிவுகள் பெயர்கள் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திவாகர_நிகண்டு&oldid=1859906" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திவாகர நிகண்டு" page.