பேச்சு:வடசென்னை அனல் மின் நிலையம்
தகவல் தொகு
சென்னையில் இருந்து 25 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் அமைந்துள்ளது வடசென்னை அனல் மின் நிலையம். தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மின் நிலையங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இங்குள்ள 5 அலகுகளின் மொத்த மின் உற்பத்தி திறன் 1830 மெகாவாட் ஆகும்.
வடசென்னை அனல்மின் நிலையம் 1994ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டது. எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதிக்கு பயன்பட்ட எண்ணூர் துறைமுகம் அருகில் இருந்ததே வடசென்னை அனல்மின் நிலையம் இங்கு அமைக்கப்பட முக்கிய காரணமாக அமைந்தது.