மறைமலைநகர்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மறைமலைநகர் (ஆங்கிலம்:Maraimalainagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.[3] இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது.

மறைமலைநகர்
—  சிறப்பு நிலை நகராட்சி  —
மறைமலைநகர்
இருப்பிடம்: மறைமலைநகர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°41′30″N 74°58′00″E / 12.69167°N 74.96667°E / 12.69167; 74.96667
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் செங்கல்பட்டு
மாநகரம் சென்னை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத், இ. ஆ. ப
நகராட்சி தலைவர் திரு.ஜெ.சண்முகம்
மக்கள் தொகை 48,449

கணக்கெடுப்பு வருடம் = 2,001

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 48,449 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மறைமலைநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80%; பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மறைமலைநகர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. மறைமலைநகர் நகராட்சியின் இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. பார்த்த நாள்: அக்டோபர் 20, 2006. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மறைமலைநகர்&oldid=3594761" இருந்து மீள்விக்கப்பட்டது