மலபார் ஆங்கில அகராதி

மலபார் ஆங்கில அகராதி அல்லது தமிழும் இங்கிலிசுமாயிருக்கிற அகராதி என்பது தமிழில் வெளிவந்த முதல் தமிழ் ஆங்கில அகராதியாகக் கருதப்படுகிறது. இது 1779 இல் வெளிவந்தது.[1] இது ஜொகான் பிலிப் பொப்ரீசியசும் மற்றும் சான் கிறித்தியான் பெரெய்தாப்டும் (John Christian Breithaupt) ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் 9000 சொற்கள் இருந்தன.[2]

மீள்பதிப்பு தொகு

இந்த அகராதி தரங்கம்பாடி அகராதி என்ற பெப்ரிசியஸ் அகராதி என்ற பெயரில் சந்தியா பதிப்பகத்தால் மீள்பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. வாழ்வியற் களஞ்சியம். தொ 1.
  2. Classified catalogue of Tamil printed books
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_ஆங்கில_அகராதி&oldid=1975508" இலிருந்து மீள்விக்கப்பட்டது