மாதிகை (அல்லது மாசிகை) என்பது மாதம் ஒருமுறை வெளியாகும் இதழ் (சஞ்சிகை). பல தமிழ் இலக்கிய இதழ்கள் மாதிகையாகவே வெளியாகின்றன. மாதிகை, திங்களிதழ், மாத இதழ் என்பன ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். உலகெங்கிலும், பல மொழிகளிலும், மாதிகைகள் பெரும்பாலும் 19-ஆம் நூற்றாண்டில்தான் வெளிவரத்தொடங்கின. தமிழில் பழைய மாதிகைகள் 1860-இல் வெளிவந்த தேசோபகாரி, 1864-இல் வெளிவந்த தத்துவ போதினி, 1870-இல் வெளிவந்த சத்திய வர்த்தினி, 1870-இல் வெளிவந்த நற்போதம், 1880-இல் வெளிவந்த கோயமுத்தூர் கலாநிதி முதலியன ஆகும். சுமார் 1860-இல் தொடங்கி 1957-ஆம் ஆண்டு வரை உள்ள ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 346 தமிழ் மாதிகைகள் பற்றிய குறிப்புகள் இன்று அறியப்படுவன[1]

மேற்கோள் தொகு

  1. பழந்தமிழ் இதழ்கள், கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001, பக். 1-312.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதிகை&oldid=3277603" இலிருந்து மீள்விக்கப்பட்டது