முடிகொண்டான் ராமர் கோயில்
முடிகொண்டான் ராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
அமைவிடம்தொகு
இக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டானில் உள்ளது. [1]
மூலவர்தொகு
ராமரின் வருகையைப் பற்றி பரதரிடம் சொல்வதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்ட காரணத்தால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.ராமர் கோதண்டராமராக கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவருக்கு வலப்புறம் சீதையும், இடப்புறம் லட்சுமணனும் உள்ளனர். [1]
விழாக்கள்தொகு
புரட்டாசி சனிக்கிழமை, ராம நவமி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.