முல்லைத்தீவு கல்வி வலயம்

முல்லைத்தீவு கல்வி வலயம் (Mullaiththivu educational zone) இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் ஓர் கல்வி வலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள 12 கல்வி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.[1] இக்கல்வி வலயம் தனக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளைப் பரிபாலித்தல், நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பரீட்சைகள் நடாத்துதல், ஆசிரியர், அதிபர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளையும் இக்கல்வி வலயமே மேற்கொண்டு வருகின்றது. இக்கல்வி வலயத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு என இரண்டு கல்விக் கோட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் இலங்கையின் நிருவாக மாவட்டமான முல்லைத்தீவில் அமைந்துள்ள இரு கல்வி வலயங்களில் இதுவும் ஒன்று ஆகும். மற்றையது துணுக்காய் கல்வி வலயம் ஆகும்.[2] இதன் தற்போதைய பணிப்பாளர் திருமதி. உ. முனீஸ்வரன் ஆவார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "It works under the Ministry of Education, Sri Lanka". Archived from the original on 20 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 1 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Divisions". பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.
  3. "Director of the zons". பார்க்கப்பட்ட நாள் 1 January 2017.