மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்

மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள் (Upper Atmosphere Research Satellite, UARS) என்பது பூமியின் வளிமண்டலத்தை, குறிப்பாக ஓசோன் படலத்தை ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் நாசா ஆய்வு நிறுவனத்தினால் ஏவப்பட்ட செயற்கைக்கோள் ஆகும். 5,900-கிலோகிராம் (13,000-இறா) எடையுள்ள இந்தச் செயற்கைக்கோள் 1991 ஆம் ஆண்டு செப்டம்பரில் டிஸ்கவரி விண்ணோடம் மூலம் பூமியின் சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது 1991 செப்டம்பர் 15 ஆம் நாள் சுற்றுப்பாதைக்கு சென்றது.

மேல் வளிமண்டல ஆய்வுச் செயற்கைக்கோள்
Upper Atmosphere Research Satellite (UARS)
இயக்குபவர்நாசா
திட்ட வகைபுவி அவதானிப்பு
செயற்கைக்கோள்பூமி
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்1991-09-15
ஏவிய விறிசுடிஸ்கவரி விண்ணோடம்
ஏவு தளம்புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
திட்டக் காலம்14 ஆண்டுகள், 91 நாட்கள்
தே.வி.அ.த.மை எண்1991-063B
இணைய தளம்http://umpgal.gsfc.nasa.gov/
நிறை5,900 kg (13,000 lb)
திறன்1600.0 W
Batteries3 x 50 ஆம்பியர்-மணி மின்கலங்கள்
சுற்றுப்பாதை உறுப்புகள்
அரைப் பேரச்சு600 கிமீ
சுற்றுப்பாதையின் வட்டவிலகல்
சேய்மைநிலை575.0 கிமீ
அண்மைநிலை574.0 கிமீ
சுற்றுக்காலம்95.9 நிமி.

மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்படக்கூடியதாக அனுப்பப்பட்ட இச்செயற்கைக்கோள் 2005 சூன் மாதத்தில் அதில் இணைக்கப்பட்ட 10 கருவிகளில் ஆறு கருவிகள் இயங்கும் நிலையில் காணப்பட்டன. ஆனாலும், 2005 திசம்பரில் செயலிழக்கச் செய்யப்பட்டது. இறுதியில் 2011 செப்டம்பர் 23 இரவு 11:23 மணிக்கும் செப்டம்பர் 24 காலை 01:09 மணிக்கும் இடையில் பூமியில் வீழ்ந்தது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடனே அது முழுமையாக எரிந்து விட்டது. ஆனாலும் அதன் எரியாத கிட்டத்தட்ட 500 கிலோகிராம் பகுதிகள் பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் மேற்குக் கரைக்கப்பால் வீழ்ந்ததாக நாசா அறிவித்தது[1].

மேற்கோள்கள் தொகு

  1. UARS Updats, நாசா, செப்டம்பர் 24, 2011

வெளி இணைப்புகள் தொகு