மைய விழித்திரை நரம்பு அடைப்பு

கண் நோய்

மைய விழித்திரை நரம்பு ( central retinal vein ) என்பது மைய விழித்திரை தமனி, சிரைக்கு இணையானதாகும். இது கண்ணின் விழித்திரையில் இரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய நரம்பாக உள்ளது. இதில் அடைப்பு ஏற்படும்போது, அதை மைய விழித்திரை நரம்பு அடைப்பு (central retinal vein occlusion, also CRVO[1]) என்கிறார்கள். இந்த நரம்பில் அடைப்பு ஏற்படுவதால் பார்வை வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இந்த நரம்பில் அடைப்பு ஏற்படும்போது புதிய இரத்தக்குழாய்கள் உருவாகின்றன. இந்த இரத்தக்குழாய்கள், கசியும் தன்மை உடையதால் பார்வை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.[2] மேலும், விழித்திரையில் உள்ள ‘மேக்குலா’ என்ற பகுதி வெகுவாகப் பாதிக்கப்பட்டு அதில் வீக்கமும் ஏற்படுகிறது. இதனால் கண் அழுத்த நோய் ஏற்படக்கூடும்.

மைய விழித்திரை நரம்பு அடைப்பு
Central retinal vein occlusion
கண் வரைபடம்; விழித்திரை நரம்பு எண் 21 ஆகும்.
சிறப்புகண் மருத்துவம்

சிகிச்சை தொகு

இதற்கான சிகிச்சையானது புதிய ரத்தக்குழாய் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய மருந்தைக் கண்ணுக்குள் செலுத்துவது ஆகும். மேக்குலாவில் ஏற்பட்ட வீக்கமும் இதனால் குறைகிறது. வயதானவர்களைக் காட்டிலும் வயது குறைவானவர்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படும்போது, சிகிச்சைக்குப் பின் பார்வை கிடைப்பதற்கான வாய்ப்பு சற்றுக் கூடுதலாக உள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Ophthalmology at a Glance, Jane Olver & Lorraine Cassidy, Blackwell Science 2005.[page needed]
  2. Hayreh, Sohan Singh; Zimmerman, M. Bridget; Podhajsky, Patricia (1994). "Incidence of Various Types of Retinal Vein Occlusion and Their Recurrence and Demographic Characteristics". American Journal of Ophthalmology 117 (4): 429–41. doi:10.1016/S0002-9394(14)70001-7. பப்மெட்:8154523. 
  3. மு. வீராசாமி (17 நவம்பர் 2018). "கண்ணிலே அடைப்பிருந்தால்..." கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2018.