ரெய்க்ஸ்டாக் கட்டடம்

ரெய்க்ஸ்டாக் கட்டடம் (Reichstag building, இடாய்ச்சு மொழி: Reichstagsgebäude; உத்தியோகபூர்வமாக: Plenarbereich Reichstagsgebäude) என்பது பேர்லினில் அமைந்துள்ள வரலாற்று மாளிகையும், செருமானிய பேரரசின் ரெய்க்ஸ்டாக் என்றழைக்கப்படும் நாடாளுடன்றமும் ஆகும். இது 1894 இல் திறக்கப்பட்டு[1] 1933 தீயினால் பாரதூரமாக சேதமாகும் வரை நாடாளுடன்றமாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போரின் பின் இக்கட்டடம் பாவனைக்கு இல்லாதுபோனது. மேற்கு, கிழக்கு செருமனிகளின் நாடாளுடன்றங்கள் வெவ்வேறு இடங்களின் இயங்கின.

ரெய்க்ஸ்டாக்
ரெய்க்ஸ்டாக் கட்டடம். அர்ப்பணிப்பு Dem deutschen Volke, அர்த்தம் செருமனிய மக்களுக்கு, இதனை கட்டடத்தின் மேலுள்ள பட்டையில் காணலாம்.
ரெய்க்ஸ்டாக் கட்டடம் is located in பெர்லின்
ரெய்க்ஸ்டாக் கட்டடம்
Location within Berlin
பொதுவான தகவல்கள்
நகரம்பேர்லின்
நாடுசெருமனி
கட்டுமான ஆரம்பம்9 சூன் 1884
நிறைவுற்றது1894
புதுப்பித்தல்1961-64, 1992
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)போல் வோலட்
புதுப்பித்தல் குழு
கட்டிடக்கலைஞர்(கள்)நோர்மன் போஸ்டர்

1960 இல் அழிவுற்றிருந்த கட்டடம் பகுதியாக புதுப்பிக்கப்பட்டது. ஆயினும், 3 ஒக்டோபர் 1990 இல் செருமானிய மீளிணைவு வரை முழுமையான புதுப்பித்தல் மேற்கொள்ளப்படவில்லை. அதன் பின் ஆரம்பிக்கப்பட்ட முழுமையான புதுப்பித்தல் 1999 இல் நிறைவுற்று, செருமானிய நாடாளுடன்ற கூடுமிடமாக மாறியது.

உசாத்துணை தொகு

  1. "Reichstag". பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Reichstag (building)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்க்ஸ்டாக்_கட்டடம்&oldid=3936258" இலிருந்து மீள்விக்கப்பட்டது