லூயி மரிய லெவே
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
அருட்தந்தை உலூயி மரிய இலெவே என்பவர் 6 ஏப்ரல் 1884 அன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள ரென் மறைமாவட்டத்தில் உள்ள இலாலி என்ற ஊரில் பிறந்தவர். தந்தையின் பெயர் ஜோசப் இலெவே. தாயின் பெயர் ஜுலியானா இலெபினே. இவர் இயேசு சபை குருவானவர். 13.1.1920 இல் குருவாக அருட்பொழிவு பெற்றார்.
1921 முதல் 1943 வரை ஆண்டாவூரணியில் பங்குபணியாளராகவும், 1943 முதல் 1956 வரை இராமநாதபுரத்தில் பங்குபணியாளராகவும், 1956 முதல் 1973ல் இறக்கும் வரை சருகணியில் ஆன்மீகக் குருவாகவும் பணியாற்றினார்.[1] [2]