வடகிழக்கு மண்டல குழு

வடகிழக்கு மண்டல குழு (North Eastern Council) என்பது ஒரு மண்டல சபை ஆகும். மண்டலக் குழு சட்டம் 1971 இன் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான ஆலோசனைக் குழுவாகும். இது நவம்பர் 7, 1972 அன்று சில்லாங்கில் நடைமுறைக்கு வந்தது. [1] இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் எட்டு மாநிலங்கள். அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகியவை ஆகும். முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். சிக்கிம் 2002 ஆம் ஆண்டில் மண்டல குழுவில் சேர்க்கப்பட்டது.[2] சபையின் தலைமையகம் சில்லாங்கில் அமைந்துள்ளது. [3]

ஐந்து மண்டலக் குழுக்களுடன் வடகிழக்கு கவுன்சில் கடும் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

பணிகள்தொகு

மண்டல குழு ஆரம்பத்தில் ஒரு ஆலோசனைக் குழுவாக அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது 2002 முதல் மண்டல திட்டமிடல் அமைப்பாக செயல்படுகிறது. இந்த மாநிலங்களின் பொருளாதார மற்றும் சமூகத் திட்டத்தை கவனித்துக்கொள்வதற்கும், மாநிலங்களுக்கு இடையிலான சுமூகமான உறவை மேம்படுத்தவும் செயல்படுகிறது.[4]

நிதிதொகு

மண்டல குழுவின் நிதி முக்கியமாக மத்திய அரசிடம் உள்ளது. வரலாற்று ரீதியாக 56% மாநில அரசுகள் மற்றும் மீதமுள்ளவை மத்திய அரசு துறைகளால் வழங்கப்பட்டுள்ளன.[4] 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 3 ஆண்டு திட்டம், 2500 கோடி வருடாந்திர பட்ஜெட்டைக் கொண்டது.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Establishment of North Eastern Council".
  2. "Sikkim becomes eighth state under NEC".
  3. Organisations பரணிடப்பட்டது 2010-07-23 at the வந்தவழி இயந்திரம் DoNER.
  4. 4.0 4.1 "NEC Final plan 2017" (PDF). 24 October 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகிழக்கு_மண்டல_குழு&oldid=3025810" இருந்து மீள்விக்கப்பட்டது