வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜூலை 2008
- ஜூலை 25: முல்லைத்தீவு, துணிக்காயில் இலங்கைப் படையினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் 25 படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- ஜூலை 23: விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தேவன்பிட்டித் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மடு அன்னையின் சொரூபம் ஓமந்தை சோதனைச் சாவடியூடாக மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. (தினக்குரல்)
- ஜூலை 22: இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்தனர். இந்த ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. (புதினம்)(புதினம்)
- ஜூலை 17: பிரித்தானியாவில் அகதி நிலை மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்ட்டால் அவர்கள் அங்கு துன்புறுத்தல்களுக்கு ஆளாவர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் எவரையும் திருப்பி அனுப்பக்கூடாது என மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்தது. (டெய்லி மிரர்)
- ஜூலை 16:
- மட்டக்களப்பில் பாலமீன்மடுப் பகுதியில் 16 பேரின் எலும்புத் துண்டங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. (புதினம்)
- மன்னாரில் அமைந்துள்ள விடத்தல் தீவு என்ற கடற்புலிகளின் மிக முக்கியமான தளம் ஒன்றைத் தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (பிபிசி)
- ஜூலை 15:
- வவுனியாவின் பாலமோட்டையில் இடம்பெற்ற தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- அம்பாறையில் மொனறாகல சாலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்னர். (புதினம்)
- ஜூலை 14: யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பொறிவெடியில் சிக்கி நான்கு படையினர் கொல்லப்பட்டனர். (தினக்குரல்)
- ஜூலை 12: பொங்கு தமிழ், 2008: ஐக்கிய இராச்சியம், லண்டனில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்றனர். (புதினம்)
- ஜூலை 11:
- மொனறாகலயில் பயணிகள் பேருந்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு, 16 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- வன்னிக் களமுனையில் விடுதலைப் புலிகளின் மிதிவெடி, பொறிவெடிகளில் சிக்கி 26 இலங்கை படையினர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூலை 9: வவுனியா, பாலமோட்டையில் இலங்கை படையினரின் முன்நகர்வு நடவடிக்கையில் 5 படையினர் கொல்லப்பட்டு 7 பேர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- ஜூலை 8: விடுதலைப் புலிகளுடன் ஜூன் மாதத்தில் இடம்பெற்ற மோதல்களில் 112 படையினர் கொல்லப்பட்டு, 793 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அறிவித்தார். (புதினம்)
- ஜூலை 6:
- மொனராகலையில் இலங்கை காவல்துறையைச் சேர்ந்த இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். (புதினம்)
- கிளிநொச்சி வட்டக்கச்சியில் வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். பொதுமக்களின் வீடுகள் பலவும் சேதமடைந்தன(புதினம்). வன்னியில் வான்தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிய இந்த வானூர்தி கட்டுநாயக்கா வான்படைத்தளத்தில் ஓடுபாதையில் இருந்து விலகியதால் சேதமடைந்தது. (டெய்லிமிரர்)
- பொங்கு தமிழ், 2008: ஆஸ்திரேலியா, சிட்னி மாநகரில் பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பெருந்தொகையான மக்கள் பங்கு கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். (புதினம்)
- ஜூலை 5: பொங்கு தமிழ், 2008:
- சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் பேரெழுச்சியுடன் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றினர். (புதினம்)
- கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்குபற்றினர். (புதினம்)
- ஆஸ்திரேலியா, மெல்பேர்ணில் நிகழ்ந்த பொங்கு தமிழ் நிகழ்வுகளில் 2,000 இற்கும் அதிகமானோர் பங்கு பற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜிலிங்கம் சிறப்புரை ஆற்றினார். (புதினம்)
- ஜூலை 4: அம்பாறை கஞ்சிகுடிச்சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி 2 இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர்.(புதினம்)
- ஜூலை 3: மன்னாரில் இலங்கைப் படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டு 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- ஜூலை 2: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கருணா பிரித்தானியாவில் குடிவரவு தடுப்பு முகாமிலிருந்து இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார். (பிபிசி)
- ஜூலை 1:
- அம்பாறையில் அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக சென்ற இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் உலங்குவானூர்தி கடுமையாகச் சேதமடைந்தது. (புதினம்)