வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் டிசம்பர் 2008
- டிசம்பர் 28:
- கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர். (சண்டேட்டைம்ஸ்)
- மட்டக்களப்பு, செங்கலடியில் அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 27:
- முல்லைத்தீவை நோக்கிய இலங்கைப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கையின் போது 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்ததாகவும் 17 உடலங்களும் படையப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இறந்த போர்வீரர்களில் ஒருவர் 17 வயதுடையவர். (தமிழ்நெட்)
- வன்னியின் வட்டக்கச்சியில் இலங்கை வானூர்திகள் குண்டுகளை வீசியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் 10 பேர் காயமடைந்தனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 23: பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் யாழ்ப்பாணம், நல்லூரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)
- டிசம்பர் 22: கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டதாகவும் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் அறிவித்தனர். (பிபிசி)
- டிசம்பர் 21:
- கிளாலியில் இடம்பெற்ற சமரில் தாம் ஒரு இலங்கைப் படை வீரரை உயிருடன் பிடித்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணிப் பகுதியைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் அறிவித்தது. (டெய்லி மிரர்)
- டிசம்பர் 20:
- கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் படையினரின் 2கிமீ முன்னரண் பகுதியைத் தாம் மீட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- வடபோர்முனையில் கொல்லப்பட்ட படையினரின் 25 உடலங்களைத் தாம் படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது. (புதினம்)
- இலங்கை இராணுவத்தின் ஏவுகணைகள் வட்டக்கச்சியில் வீழ்ந்து வெடித்ததில் இரு பொது மக்கள் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 19: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் குடியிருப்பு மீது வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)
- டிசம்பர் 16:
- கிளிநொச்சி நோக்கிய நான்கு முனைகளிலான படையினரின் முன்நகர்வின் போது 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு 250-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- முல்லைத்தீவின் அம்பகாமம் என்ற ஊரைத் தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (புதினம்)
- டிசம்பர் 14: அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் அதிரடிப்படையினரின் அணி மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- டிசம்பர் 13: கிளிநொச்சி, வட்டக்கச்சியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்தார். கனகபுரம் பகுதியில் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 1:
- கிளிநொச்சி மாவட்டம், கொக்காவில் பகுதியை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்)
- முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ ஆழ ஊடுருவும் படையணியின் கட்டளை அதிகாரி கொல்லப்பட்டார். (சங்கதி)
- வன்னி, வட்டக்கச்சியில் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் ஆறு வயது பாடசாலை மாணவி கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)