வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் மார்ச் 2008
- மார்ச் 29: இலங்கையின் தென்பகுதி மொனராகல மாவட்ட பிரதேசசபை உதவித் தலைவர் முத்துலிங்கம் என்பவர் அவரது வீட்டில் இனந்தெரியாதோரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். (டெய்லிமிரர்)
- மார்ச் 26: மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் நால்வர் காயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- மார்ச் 25: கிழக்கு மாகாணத்தில் மே 10 இல் இடம்பெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்து கொள்ளும் என அக்கட்சி அறிவித்துள்ளது. (தமிழ்நெட்)
- மார்ச் 22: முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரின் அதிவேக டோறா பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 16 கடற்படையினரில் 6 பேர் காப்பாற்றப்பட்டதாக அரசு தெரிவித்தது. (டெய்லிமிரர்), (புதினம்)
- மார்ச் 21: மன்னார் நகரில் இராணுவப் பேருந்து ஓன்று கிளைமோர்த் தாக்குதலுக்குள்ளாகியதில் 2 இரானுவத்தினர் கொல்லப்பட்டு 11 பேர் படுகாயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- மார்ச் 15: மன்னார்ப் பகுதியில் பரப்பாங்கண்டல், சேத்துக்குளம் மற்றும் கீரிசுட்டான் ஆகிய இடங்களில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுகள் முறியடிக்கப்பட்டதாகவும் 7 படையினர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மார்ச் 14: மணலாறு, கொக்குதொடுவாயில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வுத்தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் குறைந்ந்தது 15 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மார்ச் 10: கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்தனர். (புதினம்)
- மார்ச் 8:
- மன்னாரில் சேத்துக்குளம் மற்றும் மடுப் பகுதிகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சிகளின் போது 22 படையினர் கொல்லப்பட்டு 72 பேர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மொனராகலை மாவட்டத்தின் கதிர்காமம் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். (புதினம்), (டெய்லிமிரர்)
- மார்ச் 6: வன்னி கனகராயன்குளம் பகுதியில் நடந்த கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் கொல்லப்பட்டார். (புதினம்)
- மார்ச் 1: வவுனியாவில் இடம்பெற்ற கிளைமோர்க் குண்டுத் தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (டெய்லிமிரர்)