விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 5, 2008
ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பில் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு. அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் தை மாதத்தில் இடம்பெறும் ஏறுதழுவல் புகழ்பெற்றது. |