வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானம்

வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானம் இலங்கையின் திருக்கோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கி.பி.1801 ஆம் ஆண்டளவில் திரு அகிலேசப்பிள்ளை வேலுப்பிள்ளை என்பவருடன் திரு ச.சுவாமிநாத முதலியார் பரம்பரையில் வந்த திரு வீரகத்தி ராசகோன் முதலியாரும் இணைந்து இவ் ஆலயத்தை அமைத்து, திருப்பணிகள் செய்து வந்ததாகவும் 1878 வேலுப்பிள்ளை அவர்களின் மகன் வே.அகிலேசப்பிள்ளையும் தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு அவர் மறைவிற்கு பின் அவரது மூத்த குமாரனான அ. இராசக்கோன் என்பவரும் அவரது சகோதரரான திரு அழகைக்கோன் மற்றும் மயில்வாகன முதலியார் சுப்பிரமணியம் அவர்களும் இவ்வாலயத்தை பரிபாலித்து வந்துள்ளனர்.

வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானம்
பெயர்
பெயர்:திரு.வீரகத்திப் பிள்ளையார் தேவஸ்தானம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு மாகாணம்
மாவட்டம்:திருக்கோணமலை
கோயில் தகவல்கள்
மூலவர்:பிள்ளையார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

1983 - 1990 ஆகிய காலகட்டத்தில் நாட்டில் இடம்பெற்ற வன்செயல் மற்றும் யுத்த சூழல் காரணமாக இவ் ஆலயம் முழுமையாக சேதமடைந்ததுடன் இதன் பூஜை வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. பல வருடங்களுக்கு பின் 2015 ஆண்டு கால பகுதியில் இவ்வாலயத்தின் புனர்நிர்மான பணிகள் இதன் பரம்பரை வழிவந்தவரான திரு சிறிதரன் (பாப்பா) என்பவரின் முயற்சியாலும் நலன் விரும்பிகளின் உதவியுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.