வெண்மணி அச்சன் நம்பூதிரிபாடு

மலையாள எழுத்தாளர்

வெண்மணி அச்சன் நம்பூதிரிபாடு (Venmani Achhan Nambudiripad) என்று பிரபலமாக அழைக்கப்படும் வெண்மணி பரமேசுவரன் நம்பூதிரிபாடு (1817-1890) மலையாளத்தின் பிரபல கவிஞர் ஆவார். மலையாள இலக்கியத்தின் வெண்மணி பள்ளியில் ஈடுபட்டிருந்த வெண்மணி இல்லம் என்ற குடும்பத்தில் பிறந்தார். இவர் அந்தக் காலத்தின் மற்றொரு பிரபலமான கவிஞரான வெண்மணி விஷ்ணு நம்பூதிரிபாட்டின் மருமகன் ஆவார். [1]

இவர் ஒரு எளிய கவிதை பாணியை உருவாக்கினார். இதை பொது மக்கள் புரிந்து கொள்ளவும் பாராட்டவும் முடிந்தது. இவர் பொல்பயா மனையைச் சேர்ந்த சிறீதேவி என்பவரையும், கொடுங்கல்லூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி குஞ்சிப்பிள்ளை தம்புராட்டியையும் மணந்தார். இவரது மகன்களான வெண்மணி மகான் நம்பூதிரிபாடு, கொடுங்கல்லூர் குஞ்சிக்குட்டன் தம்புரான் இவரது அறிவார்ந்த பாரம்பரியத்தை முன்னெடுத்தனர்.

இவர் வசனத்தில் நீண்ட கதையையும், கடிதம் எழுதுதலில் கவிதை அமைப்பையும் தொடங்கினார். துரதிர்ஷ்டவசமாக, இவரது கவிதைகள் எதுவும் இவரது வாழ்நாளில் வெளியிடப்படவில்லை. ஆனால் பல தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு இதயத்தால் பரப்பப்பட்டன.

குறிப்புகள் தொகு