ஸ்கொட்பொரோ வழக்கு

ஸ்கொட்பொரோ வழக்கு 1930களில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ரீதியாகப் பேசப்பட்ட வழக்காகும். அதாவது ஒன்பது அமெரிக்க கறுப்பின இளைஞர்கள் இரண்டு வெள்ளை இனப் பெண்களை வன் புணர்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். 1931-இல் வழக்கு ஆரம்பமாகியது. இந்த வழக்கு அக்காலத்தில் அமெரிக்காவின் இனவெறியையும் சமத்துவமற்ற நீதியையும் எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளப்படுகின்றது.

வழக்கு தொகு

 
குற்றஞ்சாட்டப்பட்ட கறுப்பின இளைஞர்கள்

வழக்கு நடைபெற்ற போது இந்த இளைஞர்களுக்கு போதுமான சட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. வழக்கும் சரியான முறையில் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர்கள் கைது செய்யப்படும் போது வீம்ஸ் அதிகூடிய வயதான 20 ல் இருந்தார் அதே போல லியொரிஸ் 13 வயதில் இருந்தார். முதலில் பெண்கள் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள மறுத்த போதிலும் பல்வேறு வற்புறுத்தலுக்கு மத்தியில் இந்த வழக்கில் பொய் கூறினர். ஆயினும் பிந்திய வழக்கு விசாரணைகளில் இவர்கள் பிரபலமான விலை மாதுக்கள் என்று தெரிய வந்தது. International Labor Defense இந்த இளைஞர்களுக்கான சட்டத்தரனி உதவிகளைச் செய்தது. இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக லண்டன், மாஸ்கோ போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலை தொகு

1937 ல் நான்கு இளைஞர்கள் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகும் போது அவர்கள் ஆறு வருடங்களை சிறையில் கழித்து இருந்தனர். இதைப்போல பின்பு 1943 க்கும் 1950 ற்கும் இடையில் ஏனையவர்கள் விடுதலை பெற்றனர். 1976 ல் அலபாமா ஆளுனர் ஸ்கொட்பெரொ இளைஞர்கள் மீதான மன்னிப்பை வழங்கியபோது அந்த இளைஞர்களில் ஒருவரைத் தவிர மற்ற எந்தவொரு நபரும் உயிருடன் இருக்கவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கொட்பொரோ_வழக்கு&oldid=3515779" இலிருந்து மீள்விக்கப்பட்டது