ஸ்ரீவைஷ்ணவ சமயசார நிஷ்கர்ஷம்

ஸ்ரீவைஷ்ணவ சமயசார நிஷ்கர்ஷம்[1] என்னும் உரைநடை நூல் பிள்ளை லோகஞ்சீயரால் எழும்பபட்டது. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு. டெம்மி தாள்-அளவில் 600 பக்கங்களைக் கொண்ட மிக விரிவான நூல். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ளது. 200 சொற்கள் கொண்ட இதன் ஒரு பக்கத்தில் 28 சொற்கள் மட்டுமே தமிழ்ச்சொற்களாக உள்ளன. இந்நூல் 14% தமிழ்ச்சொற்களும் 86% வடமொழிச் சொற்களும் கிரந்த எழுத்துக்களுடன் கூடிய பதிப்பு இது.

மேற்கோள்கள் தொகு

  1. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 113.