2022 கோவா சட்டப் பேரவைத் தேர்தல் (2022 Goa Legislative Assembly election) இந்தியாவின் கோவா மாநிலத்தின் கோவா சட்டமன்றத்தின் 40 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கு பதிவு 14 பிப்ரவரி 2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10 மார்ச் 2022 அன்று நடைபெறுகிறது.வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 10 மார்ச் 2022 அன்று அறிவிக்கப்பட்டன.
10 மார்ச் 2022 அன்று மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதிகளையும், இந்திய தேசிய காங்கிரசு 11 தொகுதிகளையும், மகாராட்டிரவாதி கோமந்த கட்சி 2 தொகுதிகளையும், ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளையும், கோவா முன்னேற்றக் கட்சி 1 தொகுதியையும், புரட்சிகர கோவாக்காரர்கள் கட்சி 1 தொகுதியையும், சுயேட்சைகள் 3 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.[14]
இதன் மூலம் கோவா மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கோவா சட்டமன்றத்தின் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக மீண்டும் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமோத் சாவந்த் 28 மார்ச் 2022 அன்று முதலமைச்சராக பதவி ஏற்றார்.[15][16]