உத்தரகாசி மாவட்டம்

உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம்

உத்தராகாசி மாவட்டம் (ஆங்கிலம்: Uttarkashi District) வட இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் தலைநகர் உத்தராகாசி ஆகும். இது இமயமலைப் பகுதியின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் இங்கு உற்பத்தியாகிறது. இந்நதிகள் இந்து மக்களின் சமய வழிபாட்டுத் தலமாக உள்ளன. இம்மாவட்டத்தில் எல்லைகளாக இமாச்சலப் பிரதேசம், திபெத், சமோலி மாவட்டம், ருத்ரபிரயாக் மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் டேராடூன் மாவட்டம் போன்றவை அமைந்துள்ளன.

உத்தராகாசி மாவட்டம்
மாவட்டம்
Country India
மாநிலம்உத்தராகண்டம்
தலைமையகம்உத்தராகாசி
பரப்பளவு
 • மொத்தம்8,016 km2 (3,095 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்3,29,686
 • அடர்த்தி41/km2 (110/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்uttarkashi.nic.in

புனிதத் தலங்கள் தொகு

நான்கு சிறு கோயில்கள்
   
கேதாரிநாத் பத்ரிநாத்
   
கங்கோத்ரி யமுனோத்திரி

மாவட்ட நிர்வாகம் தொகு

இந்த மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

அரசியல் தொகு

இந்த மாவட்டத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

இந்த மாவட்டம் டிஹ்ரி கட்வால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரகாசி_மாவட்டம்&oldid=3545003" இலிருந்து மீள்விக்கப்பட்டது