எஸ். ஜெகதீசன்

இந்தியத் திரைப்பட இயக்குனர்

எஸ். ஜெகதீசன் அல்லது ஓம் சக்தி ஜெகதீசன் (S. Jagetheesan, இறப்பு:7 மே 2024) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரான இவர் கதாசிரியர் ஆர். கே. சண்முகத்தின் உறவினராவார். சண்முகத்துடன் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு உரையாடல் எழுதினார்.[1] ம. கோ. இரா நடித்த இதயக்கனி படத்திற்கு உரையாடல் எழுதினார். மேகத்துக்கும் தாகமுண்டு (1980), திசை மாறிய பறவைகள் (1980), பதில் சொல்வாள் பத்ரகாளி (1986), மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2][3][4] சிவாஜி கணேசன் நடித்த சிரஞ்சீவி படத்தை எழுதி தயாரித்தார்.

எஸ்.ஜெகதீசன்
பிறப்புநாகப்பட்டினம்
இறப்பு7, மே, 2024
சென்னை
தேசியம்இந்தியர்
பணிஇயக்குநர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மேகத்துக்கும் தாகமுண்டு, திசை மாறிய பறவைகள் , பதில் சொல்வாள் பத்ரகாளி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

குடும்பம் தொகு

ஜெகதீசனுக்கு குருமூர்த்தி, இராமச்சந்திரன் ஆகிய இருமகன்கள் உள்ளனர். மூப்பின் காரணமாக ஜெகதீசன் 2024 மே 7 அன்று தனது 95 வது வயதில் இறந்தார்.[5]

உரையாடல் எழுதிய திரைப்படங்கள் தொகு

இயக்கிய திரைப்படங்கள் தொகு

இயக்கிய தொலைக்காட்சித் தொடர்கள் தொகு

  • மகான் ராமானுஜர்[6]

மேற்கோள்கள் தொகு

  1. "பிரபல தமிழ்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஓம் சக்தி ஜெகதீசன் காலமானார்! இன்று மாலை இறுதிசடங்குகள்!". 2024-05-07. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. ஐஎம்டிபி
  3. வேலட் பிரஸ்
  4. ஐ எம்டிபி
  5. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்". 2024-05-08. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  6. Neethimaan (2024-05-06). "எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் பணியாற்றிய இயக்குனர் ஓம் சக்தி ஜெகதீசன் காலமானார்" (in அமெரிக்க ஆங்கிலம்). {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜெகதீசன்&oldid=3950965" இலிருந்து மீள்விக்கப்பட்டது