பூதனும் திரையும்

பூதனும் திரையும் (Poothan and Thira) என்பது இந்தியாவின் கேரளாவின் தெற்கு மலபார் பகுதியில் காணப்படும் ஒரு சடங்குக் கலை வடிவமாகும். இதில் மக்கள், இந்துக்கடவுளான சிவனின் பூத கணங்களையும், காளியின் திரை ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆடைகளில் நூதன முரசு கொட்டி நடனமாடுகிறார்கள்.

மச்சாட் மாமாங்கத் திருவிழாவிற்கு செல்லும் பூதனும் திரையும்.
வழிபாட்டின் பிரபலமான சடங்கு வடிவமான திரை.
வழிபாட்டின் பிரபலமான சடங்கு வடிவமான திரை.
வழிபாட்டின் பிரபலமான சடங்கு வடிவமான திரை.
வழிபாட்டின் பிரபலமான சடங்கு வடிவமான பூதன்.
பூதனும் திரையும்

வள்ளுவநாட்டின் கோயில் திருவிழாக்களிலு தலப்பிள்ளி, வன்னேரி மற்றும் பாலக்காடு ஆகியவற்றில் உள்ள சுற்றுப்புறங்களுடன் தொடர்புடைய பெருமண்ணன் / மண்ணான் சமூகத்தின் ஒரு பழங்கால நாட்டுப்புற கலை வடிவமாகும்.[1] திருவிழாவிற்கு எட்டு அல்லது பத்து நாட்களுக்கு முன்பு, அவர்கள் ஆடைகளை அணிந்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று நிகழ்த்துவார்கள்.

தீய சக்திகளிடமிருந்து கிராமங்கள் அல்லது நகரங்களை காப்பாற்ற கோயில்களை தூய்மைப்படுத்தும் இது வழக்கமாக வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நிக்ழத்தப்படுகிறது - குறிப்பாக திசம்பர் மற்றும் மே மாதங்களுக்கு இடையிலான பூரம் பண்டிகை காலங்களில் நிகழ்த்தப்படுகிறது.

செயல் திறன் தொகு

ஒரு பொதுவான செயல்திறன் வெறும் கூச்சல்களையும் சைகைகளையும் உள்ளடக்கியிருக்கும். இவற்றும் தாள வாந்த்தியங்களையும் கொண்டிருக்கும். நடனக் கலைஞர்கள் பெரிய விசிறி வடிவ தலை-ஆடைகள் மற்றும் பெரும்பாலும் பயமுறுத்தும் நாக்குகளை ஒட்டிக்கொண்டு கண்களைக் கவரும் விதமாக முகமூடிகளைத் அணிகிறார்கள். பூதன் விளையாடும் நடனக் கலைஞர் வழக்கமாக பிரகாசமான வண்ண இறுக்கமாக நெய்யப்பட்ட உடையை அணிந்துகொள்கிறார். பெரும்பாலும் பிரகாசமான சிவப்பு வண்ணங்கள் உட்பட, நடனக் கலைஞர் நகரும் போது பளிச்சிடும் தங்க நிற பூச்சுகளால் அலங்கரிக்கப்படுவார். திரை விளையாடும் நடனக் கலைஞர் அரை வட்ட வடிவ கருப்பு கிரீடம் அணிந்து வருவார். அதில் தெய்வத்தின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

பாரம்பரியமாக கிராமப்புற பாலக்காட்டின் மன்னான் என்ற இந்து துணை சாதியைச் சேர்ந்த கலைஞர்களும், மலப்புறத்தின் தெற்கு பகுதிகளையும் திருச்சூரின் வடக்கு பகுதிகளையும் சேர்ந்தவர்களும் பாரம்பரியமாக இதை நிகழ்த்துகிறார்கள் .

இடச்சேரி கோவிந்தன் நாயர் [2] எழுதிய பூதப்பாட்டு என்ற மலையாளக் காவியக் கவிதை [3] பூதனும் திரையும் என்ற பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Poothan & Thira". Kerala Festivals.com. பார்க்கப்பட்ட நாள் ഒക്ടോബർ 13, 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi. 2019-01-26. Archived from the original on 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-26.
  3. "Edasseri Govindan Nair Biography". PoetrySoup (in ஆங்கிலம்). 2019-01-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதனும்_திரையும்&oldid=3564595" இலிருந்து மீள்விக்கப்பட்டது