பேச்சு:கரிகால் சோழன்
ஆதாரம் தேவை தொகு
இதில்
//சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.//
சோழர் ஒன்றும் இவனாட்சிக்கு முன் குறுநில மன்னர்கள் கிடையாதே. தமிழ் நாட்டின் குறிப்பிட்ட பகுதியை அவர்கள் ஆண்டதாகத்தான் கேள்வி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:01, 7 சூன் 2012 (UTC)
கரிகாலன் காலம் இரண்டாம் நூற்றாண்டெனக் கூறுவதற்கு உறுதியான சான்றுகோல்கள். ஆராய்ச்சியாளர்கள் கருத்துகளில் பல மாறுபட்ட எண்ணங்கள் உள. அத்னால் அதை நீக்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:07, 5 சனவரி 2013 (UTC)
கட்டுரை http://thevarkalam.blogspot.in/2010/03/blog-post_1779.html வலைப்பூவிலிருந்து ஒரு சில பகுதிகளை நீக்கிவிட்டு அப்படியே பிரதியெடுக்கப்பட்டதாகத் தெரிகிறதே? --Kuzhali.india (பேச்சு) 05:23, 23 ஆகத்து 2014 (UTC)
நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் “ நன்றி: விக்கிப்பீடியா” என்று எழுதப்பட்டுள்ளது. அந்த தளத்தில் எழுத்து நடையும் கலைக்களஞ்சிய நடையில் இருப்பதை நோக்குங்கள். தகவல்கள் இங்கிருந்து நகலெடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் 2007-ஆம் ஆண்டில் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டவை. அவர் 2010-இல் பதிவை எழுதியிருக்கிறார். எனவே, இது பதிப்புரிமை மீறல் ஆகாது. எனினும், கட்டுரையில் உள்ள வர்ணனைகளையும், புகழுரைகளையும் நீக்கி கட்டுரையை மேம்படுத்த வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:27, 23 ஆகத்து 2014 (UTC)
கரிகால சோழன் பற்றிய குறிப்பு தொகு
இவரை பற்றிய விடையத்தை சாண்டில்யன் என்ற ஆசிரியர் யவன ராணி எனும் நாவலில் குறிப்பிடுகின்றார் 101.2.191.125 05:25, 28 திசம்பர் 2022 (UTC)