மகாபீடபதம் (சிற்பநூல்)

இந்தியச் சிற்ப மரபில் மகாபீடபதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. இது ஒவ்வொரு பக்கமும் நான்காகப் பிரிக்கப்பட்டு மொத்தம் பதினாறு (4 x 4) பதங்களைக் (நிலத்துண்டு) கொண்டது. இந்த அமைப்பில், நடுவில் வரக்கூடிய நான்கு பதங்களும் பிரம்மாவுக்கு உரியவை. மீதியுள்ள பன்னிரண்டு பதங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு தேவர்களுக்கு உரியவையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பிரமனுக்கு உரிய பகுதியின் எல்லைகளுக்கு வெளியே உட்புறச் சுற்றாக எட்டுத் தேவர்களுக்கு உரிய பகுதிகள் உள்ளன. வெளிப்புறச் சுற்றில் 16 தேவர்களுக்கான பகுதிகள் உள்ளன. உட்சுற்றில் வடகிழக்கில் இருந்து தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஆபவத்சன், ஆரியகன், சாவித்திரன், விவசுவதன், இந்திரன், மித்திரகன், உருத்திரன், பூதரன் ஆகியோருக்குரிய இடங்கள் உள்ளன. வெளிச்சுற்றில் வடகிழக்கில் தொடங்கி மணிக்கூட்டுத் திசையாக ஈசன் (சிவன்), சயந்தன், ஆதித்தன், பிராசன், அக்கினி, விததன், யமன், பிருங்கராசன், பிதிர், சுக்கிரீவன், வருணன், சோசன், மாருதன், முக்கியன், சோமன், அதிதி ஆகிய தேவர்களுக்கு உரிய இடங்கள் காணப்படுகின்றன.[1]

பதினாறு பதங்களைக் கொண்ட மகாபீடபதம்

குறிப்புகள் தொகு

  1. Acharya, Prasanna Kumar., 2010. பக். 26.

உசாத்துணைகள் தொகு

  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.
  • பவுன்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - மயன் அறிவியல் தொழில்நுட்பம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபீடபதம்_(சிற்பநூல்)&oldid=3850778" இலிருந்து மீள்விக்கப்பட்டது