வலைவாசல்:சைவம்


சைவ வலைவாசல்
.

அறிமுகம்

ஓம்
ஓம்

சிவபெருமானுடன் சம்மந்தமான அனைத்தும் சைவம் என்று அறியப்பெறுகிறது. சைவநெறியென்றும், சிவநெறியென்றும், சிவ வழிபாடென்றும் சைவ சமயம் வழங்கப்பெறுகிறது. சிவவழிபாடு தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். ஆதி சைவம், வீர சைவம், சித்தாந்த சைவம் என பல வகை பிரிவுகளை உள்ளடக்கிய இச்சமயம், இந்து மதத்தின் வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய இந்து சமயப்பிரிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. கல்லாடம் எனும் நூல் மூலம் முதல் தமிழ்ச்சிற்றிலக்கியத்தை தோற்றுவித்தது, பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார், சமயக்குரவர் போன்றோரின் எழுச்சியால் எண்ணற்ற சைவ இலக்கியத்தினை படைத்தது என்று சைவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டால் 'சைவத்தமிழ்' என்று அழைக்கப்பெறுகிறது.

சைவ சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

நாயன்மார்
கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார் (Nayanars) எனப் போற்றப்படுகின்றார்கள். இவர்கள் அறுபத்துமூவராவர். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.



சைவ அடியார்கள்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருஞானசம்பந்தமூர்த்தி என்பவர் அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரும், இறைவனான சிவபெருமான் மீது தேவாரப் பாடல்களை பாடியவரும் ஆவார். இவர் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார் தம்பதிகளுக்கு சீர்காழியில் மகனாகப் பிறந்தார். மூன்றாம் வயதில் தந்தையுடன் கோவிலுக்கு சென்றவர், தந்தை குளிக்க சென்ற பொழுது அவரைக் காணாது, அம்மையே, அப்பனே என்று அழ,. சிவபெருமானுடன் காட்சியளித்த உமையம்மை சம்மந்தருக்கு ஞானப்பால் அளித்தாகவும், வாயில் பாலொழுக நின்ற சம்மந்தரிடம் யார் பால்தந்ததென தந்தை வினவ, தேவாரத்தின் முதல் பாடலான "தோடுடைய செவியன்" என்று சம்மந்தர் பாடியதாக தொன்நம்பிக்கை உள்ளது.

மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று பாண்டிய நாடு சென்று, கூன்பாண்டியனின் வெப்புநோயை தீர்த்தவர். சமணர்களை அனல் வாதத்திலும்,புனல் வாதத்திலும் வென்றவர். பிள்ளை என்று சைவர்களால் அழைக்கப்பெறுகிறார். இவரின் வரலாறு பெரியபுராணத்தில் 1256 செய்யுட்களால் விவரிக்கப்பட்டுள்ளது.


சிறப்புப் படம்

சிவ அடையாளங்கள்

சிவபெருமான் நெற்றிக்கண் உடையவராகவும், வாசுகி பாம்பினை கழுத்தில் ஆபரணமாக தரித்தவராகவும், சடாமுடியில் பிறையையும், கங்கையையும் கொண்டவராகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த அடையாளங்கள் சிவபெருமானது சிலைகளிலும், ஓவியங்களிலும், சைவ நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றன.

படம்:
தொகுப்பு



பகுப்புகள்

சைவ சமய பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

  • ஏழு பிரளயங்களில் பெரும் பிரளயமான மகாபிரளயத்தின் பொழுது சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடு அனைவருக்கும் கட்டாய மோட்சம் அளித்து தனக்குள் ஒடுக்குகிறார்.
  • சிவபெருமான் நாரத முனிவருக்கும், சுக்ரமுனிவர்களுக்கும் இசையைப் பற்றி கற்பித்த உருவம் வீணா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.
  • அகச்சந்தான குரவர்கள் என திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் அழைக்கப்படுகிறார்கள்.
  • திருமால் மற்றும் பிரம்ம தேவருக்கு சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளித்தை நினைவு கூறும் விதமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.
  • தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்சபுராணம் என்று அழைக்கப்பெறுகிறது.
  • தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.


தொடர்பானவை

தொகு  

சைவம் பற்றி சான்றோர் கூறியமை


சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது; வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம் ஆரியர், ஆரியர்க்கு முற்பட்டவர் என்னும் இருவேறு நெறிகளின் இணைப்பேயாகும் - வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார்


தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
இந்து சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/இலக்கியம்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தத்துவங்கள்
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/தொண்டர்கள்



தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்


தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


இந்து சமயம்இந்து சமயம்
இந்து சமயம்
வைணவம்வைணவம்
வைணவம்
சாக்தம்சாக்தம்
சாக்தம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
சௌரம்சௌரம்
சௌரம்
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
இந்து சமயம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணபத்தியம்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:சைவம்&oldid=3783252" இலிருந்து மீள்விக்கப்பட்டது