வலைவாசல்:பெண்ணியம்



தொகு  

பெண்ணியம் வலைவாசல்


பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு. சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.

பெண்ணியம் பற்றி மேலும்...
தொகு  

சிறப்புக் கட்டுரை


அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒரு பெண்கள் அமைப்பு. இது பெண்களுக்கு சம உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக போராடி வரும் அமைப்பு.




தொகு  

பெண்ணிய எழுத்தாளர்கள்


தஸ்லிமா நசுரீன்
தஸ்லிமா நசுரீன் (பிறப்பு: ஆகஸ்ட் 25, 1962) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளரும் முன்னாள் மருத்துவரும் ஆவார். 1980களில் எழுதத் தொடங்கி சமயங்களையும் திட்டவட்டமான இஸ்லாமையும் எழுத்துகளில் கண்டனம் செய்து, பெண்ணியத்தைப் பற்றி எழுதி உலகில் புகழுக்கு வந்தார். இஸ்லாமுக்கு எதிராக எழுதினது காரணமாக வங்காளதேசத்துக்கு திரும்பி செல்லமுடியாத நிலையில் சுவீடனுக்கு வெளியேறினார். 2008இல் திரும்பி இந்தியாவுக்கு வந்து உச்ச பாதுகாப்பு நிலையில் தில்லியில் தற்போது வசிக்கிறார்.



தொகு  

பெண்ணியப் போராளிகள்


உ. வாசுகி
உ. வாசுகி இந்திய பெண் அரசியல்வாதிகளில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியக்குழு உறுப்பினர் ஆவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநிலக்குழுவின் செயற்குழு உறுப்பினரும் ஆவார். மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர்மகளிர் சிந்தனை என்ற சிற்றிதழின் ஆசிரியருமாவார்.



தொகு  

பெண்ணியம் குறித்த பகுப்புகள்


தொகு  

சாதனைப் பெண்கள்


ஆங் சான் சூச்சி
ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்.




தொகு  

உங்களுக்குத் தெரியுமா...?


  • சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவிலுள்ள சிறப்பு நீதிமன்ற கழகத்தின் தலைவரும் பெண்களுக்கு எதிராக வேற்றுமை காட்டுதலை ஒழிப்பதற்கான ஐநா குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.
  • சின்னப்பிள்ளை கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டியவர். மகளிர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும் "ஸ்திரீ சக்தி” எனும் உயர் விருது பெற்றவர்.


தொகு  

சிறப்புப் படம்


பட விளக்கம்:

ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) தனது காலத்தின் பெண் அடிமை நிலையையும், மற்ற சமூக அவலங்களையும் தனது படைப்புகள் மூலமாக வெளிச்சமிட்டுக் காட்டினார்.

தொகு  

அண்மைய நிகழ்வுகள்


உள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. (தினமணி, 5 நவம்பர் 2014)
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


Things you can do

  • பெண்ணியம் தொடர்பான விக்கித் திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  • பெண்ணியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • பெண்ணியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • பெண்ணியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • பெண்ணியம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:பெண்ணியம்&oldid=1749639" இலிருந்து மீள்விக்கப்பட்டது