அப்துல் ரஹீம் (அரசியல்வாதி)

அப்துல் ரஹீம்

அப்துல் ரஹீம் (7 ஜூன் 1902 - 14 நவம்பர் 1977) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 1958 ஏப்ரல் 3 முதல் 1962 ஏப்ரல் 2 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பணியாற்றினார்.

அவர் அன்றைய சென்னை மாகாணத்தில், காஜி அப்துல் கரீமுக்கு மகனாக பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த அவர் 1958 முதல் 1962 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பணியாற்றினார். அப்துல் ரஹீம் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார், தமிழில் நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார்.

குடும்பம் தொகு

அப்துல் ரஹீமுக்கு பீபீஜான் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  • "Members of the rajya Sabha - A" (PDF). Archived from the original (PDF) on 2019-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.