அருண்குமார் அரவிந்த்
அருண்குமார் அரவிந்த் (Arun Kumar Aravind- மே 22, 1977) மலையாளத் திரைப்பட இயக்குநர். மலையாளத்தில் புதியதலைமுறைப் படங்கள் என்று சொல்லப்படும் திரை அலையை உருவாக்கியவர்களில் ஒருவர்
அருண்குமார் அரவிந்த் | |
---|---|
![]() | |
பிறப்பு | 22 மே 1977 திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003-நடப்பு |
வாழ்க்கைத் துணை | ஐசுவர்யா |
பிள்ளைகள் | அர்ஷா |
திரைவாழ்க்கை தொகு
அருண்குமார் அடிப்படையில் ஒரு திரைப்படத் தொகுப்பாளர். 2004ல் வெளிவந்த வெட்டம் என்ற மலையாளப்படத்தை படத்தொகுப்பு செய்தார். அதன்பின் இயக்குநர் பிரியதர்சனின் பெரும்பாலான படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார்[1].
2010 ல் சியாம் மேனன் எழுதிய காக்டெய்ல் என்ற சினிமாவை இயக்கியபடி இயக்குநராக அறிமுகமானார்[2][3]. அதன்பின் 2011 ல் முரளி கோபி திரைக்கதை எழுதிய ஈ அடுத்த காலத்து என்ற படமும் 2012ல் லெஃப்ட் ரைட் லெஃப்ட் என்ற அரசியல் விமர்சனப்படமும் இவரது இயக்கத்தில் வெளிவந்தன. ஜெயமோகன் திரைக்கதை எழுதிய ஒன் பை டூ என்ற படத்தை இப்போது இயக்கிக் கொண்டிருக்கிறார்
விருதுகள் தொகு
ஈ அடுத்த காலத்து படம் திருவனந்தபுரம் திரைவிழாவில் சிறந்த படம் மற்றும் திரைக்கதைக்கான விருதைப் பெற்றது. ஏஷியாநெட் விருது சிறந்த படத்தொகுப்புக்காக வழங்கப்பட்டது.
மேற்கோள்கள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130203083723/http://www.thehindu.com/arts/cinema/article2923523.ece.
- ↑ http://expressbuzz.com/entertainment/news/the-new-%E2%80%98cocktail%E2%80%99-party/297282.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-08-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120810060012/http://www.kochivibe.com/tag/ee-adutha-kalath/.