அலை ஈழத்தின் இலக்கிய சிற்றிதழ்களில் முக்கியமானதொன்று. 1975 முதல் 1990 வரையான காலப்பகுதியில் 35 இதழ்கள் மட்டுமே வெளியான போதிலும் இதன் தாக்கம் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆரம்ப ஆசிரியர் குழுவினரில் ஒருவரான அ. யேசுராசா கடைசி வரை தொடர்ந்து ஆசிரியராகச் செயற்பட்டார். வெளிவரத் தொடங்கிய முதல் ஆண்டில் 12 இதழ்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. இந்த பன்னிரு இதழ்கள் மீண்டும் மறுபதிப்புச் செய்யப்பட்டு கெட்டி அட்டைப் பதிப்பாக வெளிவந்தன. சஞ்சிகை ஒன்று முழுமையாக மறுபிரசுரம் செய்யப்பட்டமை இதற்கு முன் தமிழில் நடைபெறாத ஒன்றாகும்.

அலை
இதழாசிரியர்அ. யேசுராசா
வகைஇலக்கியம்
இடைவெளிமாதம் ஒரு முறை
முதல் வெளியீடு1975
கடைசி வெளியீடு
— Number
1990
????
நிறுவனம்?
நாடுஇலங்கை
வலைத்தளம்[]

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_(இதழ்)&oldid=859084" இலிருந்து மீள்விக்கப்பட்டது