அவசரச் சட்டம் (இந்தியா)

அவசரச் சட்டம் என்பது இந்திய நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் நடைபெறாத நேரங்களில் குடியரசுத் தலைவராலோ அல்லது மாநில ஆளுநராலோ பிறப்பிக்கப்படும் சட்டமாகும். இச்சட்டங்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களால் பிறப்பிக்கப்படும் சட்டத்தைப் போன்றவை. ஆனால் இச்சட்டங்களுக்கு 6 வாரத்திற்குள் அல்லது 60 நட்களுக்குள்[1] நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் ஏற்பைப் பெற வேண்டும். [2]

மோதி அரசின் அவசரச் சட்டங்கள் தொகு

இந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. 20 சனவரி , 2015 வரை , 8 முறைஅவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.அவற்றுள் சில [3]

  • காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிப்பது.
  • மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித்துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டைஅனுமதிப்பது.
  • நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள்.
  • முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் ஏலம் விட.

மேற்கோள்கள் தொகு

  1. "அவசரச் சட்டம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல்". புதிய தலைமுறை இம் மூலத்தில் இருந்து 2013-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130331054613/http://puthiyathalaimurai.tv/emergency-act-implement. பார்த்த நாள்: ஏப்ரல் 30, 2013. 
  2. ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூல். தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம். 2012. பக். 215. 
  3. "அவசரச்சட்ட வழியை கைவிட வேண்டும் மோடி அரசுக்கு ஜனாதிபதி புத்திமதி". தீக்கதிர். 20 சனவரி 2015. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவசரச்_சட்டம்_(இந்தியா)&oldid=3541946" இலிருந்து மீள்விக்கப்பட்டது