அவருடைய கண்ணியமான காதலிக்கு

அவருடைய கண்ணியமான காதலிக்கு (To His Coy Mistress) என்ற மெட்டாபிசிகல் கவிதை ஆங்கில எழுத்தாளரும் அரசியல்வாதியுமான ஆன்ட்ரூ மாா்வல் (Andrew Marvell) (1621-1678) என்பவரால் எழுதப்பட்டது. இது ஆங்கில இடை ஆட்சியின் போதோ அதற்குச் சற்று முன்னரோ எழுப்பட்டதாகும் (1649-60). இது 1681இல் அவரது இறப்பி்ற்கு பிறகு வெளியிடப்பட்டது.[1]

இந்தக் கவிதை மாா்வல்ஸின் சிறந்த கவிதையாகவும் ஆங்கில இலக்கியத்தில் சிறந்த காா்படடியமாகவும் கருதப்படுகிறது. இது எழுதப்பட்ட தேதி அறியப்படாவிட்டாலும் 1650களில் எழுதப்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில் மாா்வல்ஸ் புதிய மாடா்ன் படையில் இருந்து ஓய்வு பெற்ற உயா் அதிகாரி ஃபோ்ஃபாக்ஸ் மகளுக்கு ஒரு ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.[2]

கதைச் சுருக்கம் தொகு

இந்தக் கவிதையில் கவிஞா் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துவதில் இருந்து தொடங்குகிறாா். அவருடைய காதல் தொிவி்ப்புக்கு பதில் சொல்ல மிகவும் தாமதிக்கிறவா். முதல் பத்தியில் கவிஞர், கட்டுப்பாடுகள் நிறைந்த இந்த சாதாரண வாழ்க்கையில் எந்த வில்லங்கமும் இல்லாமல் அவளை எந்த அளவிற்குக் காதலிக்கிறாா் என்பதை விவாிக்கிறாா். அவளுடைய ஒவ்வொரு உடற்பாகத்தையும் பாராட்டுகின்றார். அவள் அவருடைய காதலை மறந்தும் கூட அவருக்கு எந்த ஊக்கக்கேடும் ஆகவில்லை. இரண்டாம் பத்தியில் இந்த வாழ்க்கை எவ்வளவு சிறியது என வருத்தமடைகிறார். ஒருவர் இறப்பைத் தழுவி ஒரு முறை வாழ்க்கை போய்விட்டால் ஒருவரையொருவர் அனுபவிக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் போய்விடும் என்றும் இறக்கக்கூடிய இந்த வாழ்க்கையில் தன் காதலை அவள் ஏற்றுக்கொண்டால் என்ன என்ற கேள்வியை முன்வைக்கிறார். கடைசி பத்தியில் அந்த பெண் இவரது முயற்சிகள் அனைத்தையும் திருப்பிச் செலுத்த வேண்டுமென உந்துதலோடு கூறுகிறார். மேலும் அவர் ஒருவரையொருவர் கண்ணியத்தோடும் காதலிக்கும் போது வாழ்க்கையின் நேரம் மிக சிறிதாக தோன்றுகிறது என்றும் கூறுகிறார்.

மேற்கோள் தொகு

  1. The Oxford Authors Authors Andrew Marvell. Oxford: Oxford University Press. 1990. ISBN 9780192541833
  2. Lee, Michelle. "To His Coy Mistress by Andrew Marvell." Poetry Criticism. Detroit: Gale, Cengage Learning, 2008. 171-282. Gale.cengage.com: Literature Criticism Online. Web. 20 Oct 2011.