ஆனி இராசா

இந்திய அரசியல்வாதி

ஆனி இராசா (Annie Raja) என்பவர் பெண்களுக்கான உரிமைப் போராட்டங்களில் முன் நிற்பவர். இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பில் பொதுச் செயலராக இருக்கிறார்.[1] கேரளத்தில் பிறந்த ஆனி உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்தவர். ஆங்காங்கே நிலவும் பெண்களின் அவல நிலைகளை நேரடியாக அறிந்தவர். 2009 திசம்பரில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் ஒரு குழு சீனாவுக்குச் சென்றது. அக்குழுவுக்கு ஆனி இராசா தலைமை வகித்தார்.[2] இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் து. ராஜாவின் மனைவி ஆவார்.

2012 ஆம் ஆண்டு கொல்லத்தில் நடைபெற்ற இந்திய பொதுவுடமைக் கட்சி மாநாட்டில் ஆனி இராசா.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனி_இராசா&oldid=3515993" இலிருந்து மீள்விக்கப்பட்டது