ஆலிசு எக்கா

இந்திய எழுத்தாளர்

ஆலிசு எக்கா (Alice Ekka) இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடிப் பின்னணியில் இருந்து வந்த முதல் ஆதிவாசிப் பெண் கதைசொல்லியாக அறியப்படுகிறார். ஓர் எழுத்தாளராகவும் ஆலிசு எக்கா அறியப்படுகிறார்.[1] [2] [3]

ராஞ்சியில் 1917 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று முண்டா சமூகத்தில் எக்கா பிறந்தார்.[1] 1938 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள இசுகாட்டிசு தேவாலயக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற சார்க்கண்டின் முதல் பழங்குடிப் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார்.

1950, 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் இவர் இந்தி மொழியில் கதைகளை எழுதினார். [1] இவரது கதைகளின் தொகுப்பு, ஆலிசு எக்கா கி ககானியன் வெளிவந்தது, வந்தனா டெட்டே என்பவரால் இது திருத்தப்பட்டது, (ராதாகிருஷ்ண பிரகாசன்,ISBN 978-8183617918 ) இவரது மரணத்திற்குப் பின் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது

1960 ஆம் ஆண்டுகளில் இவரது கதைகள் ஆதிவாசி பத்ரிகா என்ற வார இதழில் வெளிவந்தன. [4]

இவர் "இந்தியாவின் முதல் பெண் பழங்குடியினக் கதைசொல்லி" என்று வர்ணிக்கப்படுகிறார். இவரது பிறந்தநாளின் நூற்றாண்டு விழா சொந்த ஊரான ராஞ்சியில் "அனைத்திந்திய பழங்குடியினப் பெண்கள் எழுத்தாளர் சந்திப்பு" என்ற பெயரில் இரண்டு நாள் மாநாடாக கொண்டாடப்பட்டது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Our Pioneers: Alice Ekka". Pyara Kerketta Foundation. Archived from the original on 21 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 November 2018.
  2. 2.0 2.1 "All India Tribal Women Writer's Meet begins in Ranchi". http://jharkhandstatenews.com/article/grapevine/36/all-india-tribal-women-writer-s-meet-begins-in-ranchi/. பார்த்த நாள்: 20 November 2018. 
  3. "Alice Ekka story collection unveiled". https://www.dailypioneer.com/2015/state-editions/alice-ekka-story-collection-unveiled.html. பார்த்த நாள்: 20 November 2018. 
  4. Poyam, Akash. "Ten voices from Adivasi literature". The Caravan (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிசு_எக்கா&oldid=3593003" இலிருந்து மீள்விக்கப்பட்டது