இசக்கி சுப்பையா
இந்திய அரசியல்வாதி
இ. சுப்பையா (E. Subaya) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். 2011, 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
இசக்கி சுப்பையா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் 2021–முதல் | |
முன்னையவர் | ஆர். முருகையா பாண்டியன் |
தொகுதி | அம்பாசமுத்திரம் |
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு | |
பதவியில் 2011–2016 | |
முன்னையவர் | இரா. ஆவுடையப்பன் |
பின்னவர் | ஆர். முருகையா பாண்டியன் |
தொகுதி | அம்பாசமுத்திரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அம்பாசமுத்திரம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அதிமுக |
முதலமைச்சர் ஜெயலலிதாவால் சட்ட, நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அமைச்சராக 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் நியமிக்கப்பட்டார். பின்னர் இதே ஆண்டின் சூலை மாதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
- ↑ "Jayalalithaa sacks six Tamil Nadu ministers". NDTV. PTI. 4 November 2011. http://www.ndtv.com/india-news/jayalalithaa-sacks-six-tamil-nadu-ministers-572958. பார்த்த நாள்: 2017-05-04.