இதயம் இல்லாத மான்

இதயம் இல்லாத மான் (The Deer without a Heart) ஒரு பழங்கால கட்டுக்கதை ஆகும், இது ஐரோப்பாவில் ஈசாப்பின் நீதிக்கதைகளில் இடம் பெற்றதாகும். பெர்ரி குறியீட்டில் இக்கதைக்கு 336 வது எண் வழங்கப்பட்டுள்ளது.[1] இது ஒரு மான் (அல்லது கிழக்கத்திய நாடுகளில் இம்மிருகம் கழுதை எனவே குறிப்பிடப்படுகின்றது) தந்திரமான நரியால் நோய்வாய்ப்பட்ட சிங்கத்தைப் பார்க்க இரண்டு முறை வலியுறுத்தி அழைத்து வரப்பட்டது. சிங்கம் அதைக் கொன்ற பிறகு, நரி மானின் இதயத்தைத் திருடிச் சாப்பிட்டது. 'மானின் இதயம் எங்கே?' என்று சிங்கம் கேட்டபோது, சிங்கத்தின் குகைக்கே வந்து தன்னை இரையாக்கிக் கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமான ஒரு விலங்கிற்கு இதயம் இருந்திருக்க முடியாது என்று நியாயப்படுத்தியது. இது இதயம் எண்ணங்கள் மற்றும் புத்திசாலித்தனத்தின் இருப்பிடம் என்ற பண்டைய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. ஆர்னே-தாம்சன் வகைப்பாடு அமைப்பில் கதை வகை 52 என பட்டியலிடப்பட்டுள்ளது.[2]

கிழக்கிலிருந்து வரும் கதை தொகு

 
பஞ்சதந்திரத்தின் 15 ஆம் நூற்றாண்டின் பாரசீக மொழிபெயர்ப்பிலிருந்து - நரி சிங்கத்திடம் அறிக்கை செய்கிறது

இந்திய பஞ்சதந்திரத்தில் காணப்படும் கதையின் வடிவமோ, கழுதையின் காதுகளும் இதயமும் தனது நோய்க்கான சிகிச்சை என்று நம்பும் ஒரு சிங்கத்தைப் பற்றியது. சிங்கத்தின் வேலைக்காரனான குள்ளநரி தன்னுடன் வரும்படி ஒரு கழுதையை வற்புறுத்துகிறது ஆனால் சிங்கம் கழுதையை முதல் முயற்சியிலேயே கொல்ல முடியாத அளவுக்கு பலவீனமாக உள்ளது, தப்பி ஓட முயற்சித்த கழுதையை குள்ளநரி ஏமாற்றி மீண்டும் திருப்பி சிங்கத்திடம் அனுப்ப வேண்டியிருந்தது. அதன் பிறகு, குள்ளநரி பசியுடன் இருந்த சிங்கத்தை இறந்த கழுதையுடன் விட்டுவிடுமாறு வற்புறுத்துவதோடு இறந்த கழுதையின் காதுகளையும் இதயத்தையும் தனக்காக எடுத்துக்கொள்கிறது. கழுதையின் காதுகள் மற்றும் இதயம் இல்லாததற்கான நரியின் விளக்கம் என்னவென்றால், மிகவும் முட்டாள்தனமான ஒரு விலங்கு கேட்க அல்லது சிந்திப்பதற்கான உறுப்புகளைக் கொண்டிருந்திருக்க முடியாது என்பதேயாகும். [3]

தொடர் மொழிபெயர்ப்புகள் மற்றும் தழுவல்கள் மூலம் இந்தக் கதை மேற்கு நோக்கி பயணித்து இறுதியில் அரேபியர்களை ஆக்கிரமித்து இசுபெயினுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நேரத்தில் கதையின் விவரங்கள் கணிசமாக மாறிவிட்டன. இதே கதையின் அரேபிய வடிவமொன்றில், ஒரு கழுதை சிங்கத்திடம் அகந்தையோடு மோத நினைத்தது. இந்த மோதலில் கழுதை கொல்லப்பட்டது. இந்த வடிவத்திலும் நரி கழுதையின் இதயத்தைத் தின்று விட்டு சிங்கத்திடம் இவ்வாறான முட்டாள் மிருகத்திடம் இதயம் இருந்திருக்க முடியாது என்ற காரணத்தையே கூறுகிறது. [4] கதையின் யூத வடிவங்களும் உள்ளன, அதில் ஒன்றில் கழுதை சுங்கக் காப்பாளராகவும் மற்றொன்றில் கப்பலில் கட்டணம் கோருபராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. [5]

மேற்கில் இருந்து வந்த கதை தொகு

"சிங்கம், நரி மற்றும் மான்" என்ற கதை முதன்முதலில் ஆர்க்கிலோக்கஸின் கவிதைகளில் தோன்றிய ஒரு பழமையான ஒன்றாகும். இது பாப்ரியஸின் தொகுப்பில் நீண்ட காலமாக சொல்லி வரப்பட்டது. இதில் வேட்டையாட முடியாத அளவுக்கு உடம்பு சரியில்லாத சிங்கத்தின் குகையைப் பார்க்க நரி இரண்டு முறை மானை வற்புறுத்துகிறது. நரி இதை ஒரு கரடுமுரடான அரவணைப்பாக விளக்கி மானை அதன் மரணத்திற்குத் திருப்புகிறது. [6] இது கிரேக்க மொழியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது, இதனால் இடைக்கால ஐரோப்பிய மாறுபாடுகள் மேற்கத்திய வம்சாவளியை விட கீழ்திசை நாடுகளின் வடிவங்களுடன் சமானமானதாக இருக்கலாம். மேரி டி பிரான்சின் கூற்றுப்படி, பஞ்சதந்திரத்தில் உள்ளதைப் போல, சிங்கத்திற்கு அதன் நோய்க்கான சிகிச்சையாக மானின் இதயம் தேவைப்படுகிறது. [7]

அவரது சமகாலத்திலுள்ள இதே கதையின் மிகவும் வித்தியாசமான வடிவம், பெரெச்சியா ஹா-நக்டனின் "ஃபாக்ஸ் ஃபேபிள்ஸ்", ஏவியனஸின் இலத்தீன் கவிதைக்கு ஏதோ கடன்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது, இது பெர்ரி குறியீட்டில் 583 வது எண். இதில் ஒரு பண்ணைத் தோட்டத்தின் வயல்களில் சுற்றித் திரிந்ததற்காக ஒரு பன்றி அதன் காதுகளை துண்டித்துக் கொண்டு, பின்னர் தனது உயிரைக் கொடுக்கிறது. ஒரு திருட்டு விவசாயி பன்றியின் காணாமல் போன இதயத்தை தனது எஜமானரிடம் வழக்கமான முறையில் விளக்குகிறார். [8] ஆனால் பெரெச்சியாவின் வார்த்தைகளில் காட்டுப்பன்றி அரச சிங்கத்தின் தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து, தண்டனையில் அதன் காதுகளையும் கண்களையும் இழந்த பிறகு, இறுதியாக கொல்லப்பட்டு, இதயம் நரியால் திருடப்பட்டதாக உள்ளது. [9] இந்த இறுதி விவரங்கள் கட்டுக்கதையின் இதே பாணியிலமைந்த பிற வடிவங்களுடன் ஒரு ஒருங்கமைவை நிரூபிக்கின்றன. [10] ஜுவான் ரூயிஸின் இன்னும் பிந்தைய ஸ்பானிஷ் வடிவம், சிங்கத்தை தனது முரண்பாடான இசையால் விழித்திருக்க வைக்கும் ஒரு இசைக் கழுதையை கதை மாந்தராகக் கொண்டது. இந்த வடிவத்தில் கழுதையானது ஓநாய்க்கு தனது இதயத்தையும் காதுகளையும் இழக்கிறது [11]

மாற்றத்தின் செயல்முறை நவீன காலத்திற்கும் தொடர்கிறது. ஸ்டூவர்ட் கிராஃப்டின் 12 நிமிடத் திரைப்படமான தி ஸ்டாக் வித் எ ஹார்ட் (2009/10) இல், மானிடம் திருடிய இதயத்தை சிங்கத்தை நம்பவைப்பதற்காக நரி மீண்டும் மானிடம் வைப்பதாகச் செய்வதன் மூலம் முடிவில்லாத சுற்றுப் பதிப்பில் கதை நீளமாக விவரிக்கப்பட்டுள்ளது. [12]

மேற்கோள்கள் தொகு

  1. Aesopica
  2. Hasan M. El-Shamy, Types of the Folktale in the Arab World: A Demographically Oriented Tale-type Index, Indiana University 2004, pp.19-20
  3. Panchatantra, trans. Arthur W. Ryder, "Flop-Ear and Dusty"
  4. Histoire économique et sociale de l'Empire ottoman et de la Turquie (1326-1960), Leuven 1995, p.256
  5. Israel Abrahams, The Book of Delight and Other Papers, “The Fox’s Heart”
  6. F.R.Adrados History of the Graeco-Latin Fable vol.3, Leiden NL 2003, vol.3, p.438
  7. The fables of Marie de France, Birmingham AL 1988, pp.181-3
  8. F.R.Adrados History of the Graeco-Latin Fable vol.3, Leiden NL 2003, p.559
  9. Fables of a Jewish Aesop, Jaffrey NH 03452 2001 story 105
  10. S.Thompson, Motif-index of folk-literature, K402.3
  11. Louise Mirrer, Women, Jews, and Muslims in the texts of reconquest Castile, University of Michigan 1996, p.134
  12. Version online
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயம்_இல்லாத_மான்&oldid=3665102" இலிருந்து மீள்விக்கப்பட்டது