இந்தியக் குடியரசுக் கட்சி (சனநாயகம்)

இந்தியக் குடியரசுக் கட்சி (சனநாயகம்) (Republican Party of India-Democratic) என்பதுஇந்தியாவில் செயல்பட்ட அரசியல் கட்சி ஆகும்.[1] இக்கட்சியின் தலைவர் டி. எம். காம்ப்ளே ஆவார். டி. எம். காம்ப்ளேவின் மரணத்திற்குப் பிறகு, நந்தா டி. காம்ப்ளே இக்கட்சியின் தலைவரானார்.

இந்தியாவின் பல்வேறு தலித் கட்சிகள் பயன்படுத்தும் கொடி

இந்தக் கட்சி இந்தியக் குடியரசுக் கட்சியிலிருந்து பிரிந்த குழுவாக இருந்தது. 2004 தேர்தலுக்குப் பிறகு, இது மக்களவையில் சிறிய பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்தது. மேலும் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்தது. இது மகாராட்டிரா மாநிலத்தில் செயல்படும் கட்சியாக மட்டுமே இருந்தது.

5 மே 2011 அன்று, இந்தியக் குடியரசுக் கட்சி (சனநாயகம்) பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தன்னை இணைத்துக் கொண்டது. 2015-ல், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் 26 அரசியல் கூட்டணியில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது.[2]

28 செப்டம்பர் 2015 அன்று, மகாராட்டிராவில் தணிக்கை செய்யப்பட்ட இருப்புநிலைகள் மற்றும் வருமான வரி ஆவணங்களைச் சமர்ப்பிக்காததற்காகப் பதிவு நீக்கப்பட்ட 16 கட்சிகளில் இந்தியக் குடியரசுக் கட்சி (சனநாயகம்)யும் ஒன்று. இதனால், இவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னத்தினை இழந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Republican Party of India (A)". www.republicanpartyofindia.org. Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.
  2. "Who are Modi's 26 allies in the NDA?". பார்க்கப்பட்ட நாள் 2015-10-02.