இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு

இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு என்பது இந்தியப் பெருங்கடலின் கரைகளில் வாழும் மக்களுக்கு வரவிருக்கும் சுனாமி பேரலை பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ஒரு ஏற்பாடாகும். 2004 சுனாமி நிகழ்வுக்கு பின் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.[1][2][3]

பின்னணிக் காரணம் தொகு

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலில் இந்திய பெருங்கடல் பகுதியில் லட்சக் கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். இனி வரும் காலங்களில் சுனாமி பேரலை ஏற்பட்டால் அது கரையை அடையும் முன் கரையில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்ப இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மேற்கோள்கள் தொகு