இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்

இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள் என்பன நாட்டின் முதன்மைக் குடிமகனுக்கு உள்ள சட்டம், உடன்ப்டிக்கை, நிர்வாக, சட்டமன்ற, நீதி, நிதிதுறை, பாதுகாப்புசார் நெருக்கடி கால அதிகாரங்களை குறிப்பனவாகும்.குடியரசு தலைவருக்கு ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. இயல்பிகந்த சூழ்நிலையில் மட்டுமே இவர் தன்விருப்புரிமையில் அதிகாரத்தை பயன்படுத்துவார்.

சட்டம், உடன்படிக்கை அதிகாரங்கள் தொகு

இந்திய நாட்டின் அரசத் தலைவருக்கு நாடாளுமன்றம்,சட்டமன்றம் சட்டமியற்றும் அதிகாரமும்,பிற நாடுகளுடன் உடன்படிக்கை செய்துகொள்ளவும் மாநிலத்திற்கு உத்திரவிடவுமான அதிகாரமும் உண்டு

நிர்வாக அதிகாரம் தொகு

நாட்டின் அனைத்து உத்தரவுகளும்,அறிவுறுத்தல்கள் குடியரசு தலைவரின் பெயரில் வெளியிடப்படுகின்ற்ன. இவருக்குபிரதம அமைச்சர்,அட்டர்னி ஜனரல்,அமைச்சர்கள்,உச்சநீதி மன்ற நீதிபதி, பிற மன்ற நீதிபதிகள்,உயர் நீதி மன்ற நீதிபதி,மாநில ஆளுநர்கள் நிய்மித்தலும் மாநில ஆணையம்,மாநில மன்றம். நிதி ஆணையம் அமைத்தலுக்குமான அதிகரங்கள் உண்டு., அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு தெரிவிக்க வேண்டும்.

சட்டமன்ற அதிகாரம் தொகு

நாடாளுமன்றத்தைக் கூட்டவோ அல்லது நீட்டிக்கவோ அதிகாரம் உண்டு.முதல் பாதீட்டுக் கூட்டத்தொடரில் உரையாற்றவும் அரசின் கொள்கைகள்,திட்டங்கள் வெளியிடவும் ,ஒப்புதல் பெற்ற பின்னர் சட்டமாக்கவும் அதிகாரம் உண்டு. நிதிச் சட்டவரைவு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அறிமுகப்படுத்தப்படும். அவை இல்லாத பொது சட்டங்களைப் பிறப்பிக்கலாம்.

நீதித்துறை அதிகாரங்கள் தொகு

உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கவோ,நீக்கவோ அதிக்காரம் உண்டு.குற்ற தண்டனை குறைக்கவோ,நிறுத்தவோ,ஒத்திவைக்கவோ அதிகாரம் உண்டு.

நிதித்துறை அதிகாரங்கள் தொகு

நிதிச் சட்ட வரைவு,ஒப்புதல் நிதி ஆணையம்,நாட்டின் நிதி நிலைமை ஆகியவற்றைத் தீர்மானிக்கிறார்.

படைத்துறை அதிகாரம் தொகு

முப்படை அதிகாரி என்பதால் அமைதிக்காலம், போர்க்காலம், நெருக்கடிக்காலம் ஆகிய்ய மூன்று நிலைமைகளிலும் முப்படைக்களும் இவருக்குக் கட்டுப்பட்டவை. இவருக்கு உடன்படிக்கை எதையும் கையெத்திடவும் முழு அதிகாரம் உண்டு.

நெருக்கடிநிலை அதிகாரம் தொகு

நெருக்கடிநிலைக் காலங்களில், வெளி நெருக்கடி,உள் நெருக்கடி, நிதி நெருக்கடி நிலைமைகளில் நாட்டின் முழு பொறுப்பும் இவரிடம் உள்ளது.

மேற்கோள் தொகு

[1]

  1. மத்திய, மாநில உள்ளாட்சி அமைப்புகள். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 2009. பக். 73-74.